tamilnadu

img

போராட்டத்தின் எதிரொலி வரி உயர்வு ரத்து - என்.குணசேகரன்

தற்போது வசூலிக்கப்படுகிற உயர்த்தப்பட்ட சொத்துவரி வசூலை நிறுத்தி வைப்பதாகவும், 2018 ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட சொத்து வரியே வசூலிக்கப்படும்  என்றும்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே தொடர்ச்சியான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடை பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அறிவிப்பை கடு மையாக எதிர்த்தது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துவரும் நிலையில், வீட்டுவரி உயர்வு மக்கள் மீது தாங்கொண்ணாச் சுமையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டி, உயர்வை உடனடியாக கைவிடவேண்டும் என்று கட்சி வலியுறுத்தியது. அத்துடன் உள்ளாட்சித்தேர்தல் நடத்தாத நிலையில், உள்ளாட்சி மன்றங்களில் விவாதிக்காமல் முடிவு எடுப்பது ஜனநாயக விரோதம் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டி யது. 

இந்தக்  கோரிக்கைகளை வலியுறுத்தி,2018, ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாநிலம் தழுவிய போராட் டங்கள்  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து மாநகராட்சிகளி லும் பெரும்பான்மையான நகராட்சிகளிலும், பேரூராட்சிகளி லும் நடைபெற்றன. கண்டன இயக்கங்களின்போது பல்லா யிரக்கணக்கான மனுக்கள், மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. 

வரி சீராய்வு குளறுபடிகள்   

கடந்த 2018 ஏப்ரல் மாதம் தமிழகமெங்கும் சொத்துவரி சீராய்வு  மேற்கொள்ளப்பட்டது.வீட்டு உரிமையாளர்களிடமி ருந்து அவர்களின் வீடு பற்றிய தகவல்களை பெற்று, உயர்த்தப்பட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டது.இதில் பல்வேறு   குளறுபடிகள் நிகழ்ந்தன.வாடகை மற்றும் வாடகை  அல்லாத குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்துக்கும்  50 சதவீதத்திற்கு மிகாமல் உயர்த்துவதற்கு  உத்தரவிட்டதாக அரசாங்கம் தெரி வித்தாலும் கண்மூடித்தனமாக வரித்தொகை உயர்த்தப் பட்டது.பழைய தொகையை விட பத்து மடங்கிற்கு மேலாக பல இடங்களில் வரி விதிக்கப்பட்டது. அது சில இடங்களில் 700 சதவீதத்தை தொட்டிருக்கிறது. எந்தவித விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறையும் இல்லாமல் மானாவாரியாக உயர்வு அமலாக்கப்பட்டது. அரசின் நிர்வாக கோளாறுகளும் மக்கள் நலன் மீது அதிமுக ஆட்சியின் அலட்சியப் போக்கும் இதில் வெளிப்பட்டன.

எனவே வரி உயர்வுக்கு மட்டுமல்லாது, உயர்த்தப்பட்ட தொகை கணக்கீட்டிற்கு எதிராகவும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து திரண்டனர். கையெழுத்து இயக்கங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மக்கள் நடத்தினர். பல இடங்களில் இந்த இயக்கங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைமை தாங்கி யது. குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் நடத்திய இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியது. 

உலகமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பங்கீடு என்பது நியாய மான முறையில் நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் ‘‘உப யோகிப்பாளர் கட்டணம் செலுத்து’’ (User pay) என்ற கருத்தே உலகமயமாக்கலின் அடிப்படை தாரக மந்திரமாகும். மக்கள் அனைவருக்கும் சொந்தமான பொது வளங்கள் தனியார்மயமாக்கப்பட்டு ‘‘உபயோகிப்பாளர் கட்டணம் செலுத்து’’ கொள்கை புகுத்தப்பட்டது. 

புதிய நகரமய கொள்கை 

தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள புதிய நகர மயக் கொள்கையில், மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் சேவைகளிலிருந்து தங்களை பெருமளவுக்கு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. “சுய பூர்த்தியடைந்த உள்ளாட்சி மன்றங்கள்” என்ற கருத்தை இந்தக் கொள்கை கொண்டிருக்கிறது.அதாவது கடுமையான கட்டண விதிப்புகள் மூலம் உள்ளாட்சி மன்றங்கள், சுயமாக தங்கள் வருவாயினை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று வழி காட்டப்பட்டுள்ளது .

சொத்து வரி ,குடிநீர் கட்டணம் என பலவகைகளில் மக்கள் மீது வரிகளைத் திணித்து சுயமாக உள்ளாட்சி மன்றங்கள் இயங்க வேண்டுமெனவும் மாநில மத்திய அரசுகளை எதிர் பார்த்து நிற்கக் கூடாது என்றும் புதிய நகரமயக் கொள்கை உரக்கப் பேசுகிறது.  கடந்த காலத்தில் மத்திய அரசு பின்பற்றிய நவீன தாராள மயம், நகரங்களில் தீவிரமாக அமலாக்கப்பட்டு வருகிறது.தற்போதைய புதிய நகரமயக் கொள்கை, பல மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. இதன் பின்னணியில் தான் தமிழகத்தில் சொத்து வரி உயர்வைப் பார்க்க வேண்டும். அரசியல் ரீதியாகவும், மத்திய அரசுக்கு மாநில அதிமுக அரசு அடிபணிந்து வருகிறது.

தற்போது ஏற்றப்பட்ட வரி உயர்வு ரத்து செய்யப்பட்டு பழைய வரிவிதிப்பு தொடரும் என்று மாநில அரசு  அறிவித்தி ருந்தாலும் மோசமான நகரமய  கொள்கைகளிலிருந்து அர சாங்கம் பின்வாங்கவில்லை. தேர்தல் ஆதாயம் பெறுவ தற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பரவலாக மக்களிடையே கருத்து நிலவுகிறது. வரி உயர்வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்த போதும்; வணிகர் கள், நடுத்தர, நலிவடைந்த பொருளாதார நிலையில் வாழ்வோர் என  பல  பிரிவினர் மனுக்கள் மூலமாக வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வந்த போதிலும் அரசு பிடிவாதமாக இருந்தது. இந்த பிரச்சனையில் ஆழமான அதிருப்தி  மக்களிடையே வேரூன்றியிருந்தது. இன்னமும், அரசு பின் வாங்காமல் இருந்ததால் மக்கள் இந்த அரசுக்கு எதிராக தேர்தலின்போது திரும்புகிற நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் வரி உயர்வினை ரத்து செய்துள்ளனர்.எனவே இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.இந்த வெற்றியில் இடையறாது இப்பிரச்ச னையில் போராடி வந்த கட்சி என்ற வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்ப்புற கட்சி அணிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

உறுதியான நகர்ப்புற  மக்கள் இயக்கம்

எனினும், நகரமயம் முன்வைத்துள்ள சவால்கள் அதிகம். உள்ளாட்சி அமைப்புக்கள் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு கடுமையான வரி உயர்வை மேற்கொள்ளும் ஆலோசனைகளை அதிகாரிகள் மட்டத்திலும் கடன் கொடுத்த உலக வங்கி மட்டத்திலும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. உலகமயமாக்கல் கொள்கைகள் கடும் நெருக்க டிக்கு இட்டுச் செல்லும் நிலையில்  வரி உயர்வு உள்ளிட்ட தாக்குதல்கள் அதிகரிக்கும். அவற்றை எதிர்கொள்ள உறுதி யான நகர்ப்புற மக்கள் இயக்கம் கட்டப்பட வேண்டும்.  உயர்த்தப்பட்ட சொத்து வரியை மறுபரிசீலனை செய்வ தாகவும் அதற்கு ஏற்ற வகையில் அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். அந்த குழுவின் அறிக்கை பெறும் வரையில் ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்துவரி, அவர்களின் சொத்து வரி கணக்கில் அடுத்த 6 ஆண்டுகளில் ஈடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தக் குழு வரி விதிப்பு பரிசீலனையை எவ்வாறு மேற் கொள்ளும்? இதனை  அமைச்சர் தெளிவுபடுத்தவில்லை. தேர்தலில் ஆதாயம் பெற்ற பிறகு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்திடும் வகையில் மீண்டும் வரி உயர்வு விதிக்கப் படுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மக்களின் சந்தேகங்களை கணக்கில் கொண்டு  அர சாங்கம் தெளிவான அறிவிப்புக்களை வெளியிட வேண்டும். எவ்வித வரி சீராய்வாக இருந்தாலும் மக்களிடம் கருத்து கேட்பதும், மக்கள் அமைப்புக்களின் கருத்தை அறிவதும் அவசியம். முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன் றங்களில் விவாதம் நடத்திட வேண்டும். கருத்து கேட்பதும், வெளிப்படைத்தன்மையும் ஜனநாயக நடைமுறைகள். அதிகாரிகளிடம் ஒட்டு மொத்தப் பொறுப்பினை அளித்து, அரசாங்கம் வேடிக்கை பார்க்கக் கூடாது.

நகர்ப்புற ஏழை நடுத்தர மக்களின் நுகர்வுத்திறன் குறைந்து வருவதை புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன. இந்நிலையில் கண்மூடித்தனமான வரி, கட்டண உயர்வுகள் மக்களை மேலும் வாட்டி வதைத்திடும். மத்திய- மாநில அரசு கள் மக்களை துயரத்தில் ஆழ்த்தி, நகரங்களை கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்கான களங்களாக மாற்றிட முயலுகிற நிலையில், மக்கள் விழிப்புடன் நகர்ப்புற உழைக்கும் மக்கள் இயக்கத்தை வலுப்பெறச் செய்திடல் வேண்டும். இதுவே இப்பிரச்சனைக்கு சரியான தேர்வு.

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)