சனாதனக் குடும்பத்திலிருந்து சமுதாய விடுதலைக்கு... ஜி.ராமகிருஷ்ணன்
சின்னச் சின்ன மாற்றங்களோடு ஓய்ந்துவிடாமல், முழுமையான சமுதாய விடுதலைக்காகப் போராடி வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து மக்கள் நலன் காக்கும் போராட்டத்தில் தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த முன்னணித் தோழர்களில் ஒருவர் கே.வைத்தியநாதன்.
தொழிலாளர்களுக்காகப் பாடுபடுவதையே வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் தோழர் கே.வைத்தியநாதன், உதாரணமாக புதுவை ரோடியர் மில் தொழிலாளி தா.முருகன் உடல் நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்து தனது சொந்த ஊருக்குச் சென்றார். திரும்பி வந்தபோது அவரது விடுப்புக் கடிதம் நிராகரிக்கப்பட்டதாகவும், வேலையிலிருநது நீக்கி விட்டதாகவும் நிர்வாகம் கூறியது. சாதாரண கூலித் தொழிலாளியான தா.முருகன் இது குறித்து, கட்சி அலுவலகம் வந்த வைத்தியநாதனிடம் முறையிட்டார். அச்சமயத்தில் தா.முருகன் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். பிரச்சனையைத் தொழிலாளர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது சங்கம். தா.முருகனுக்குப் பதவி உயர்வு கொடுத்து வேலையில் சேர்க்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுவை தொழிற்சங்க வரலாற்றிலேயே இத்தகைய தீர்ப்பு கிடைத்தது இதுதான் முதல்முறை. அந்த தா.முருகன் தான் பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். இப்பொழுது அவர் கட்சியின் முழுநேர ஊழியர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்.
சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த தோழர் வைத்தியநாதன் 1991இல் ஒரு பெரிய சாலை விபத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் இவரது இடதுகால் சரியாகவில்லை என்பதால் கடைசி வரை ஊன்றுகோல் உதவியுடன் தான் நடந்தார். தோழர் கே.வி.சிஐடியு மாநில மையத்திலிருந்தே கட்சி உறுப்பினராக, சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவராக, 90 வயதிலும் தோழர்களின் அரவணைப்பில் இன்றளவும் தன்னால் முடிந்த பணிகளை நிறைவேற்றி வந்தார்.
சனாதானப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதை உதறி ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக உருவானார் கே.வைத்தியநாதன். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க முதல் தலைமுறை தலைவர்களான பி.ராமமூர்த்தி. எம்.ஆ.வெங்கட்ராமன். ஏ.பாலசுப்பிரமணியம். ஏ.நல்லசிவன். ஆர்.உமாநாத், என்.சங்கரய்யா போன்றோரோடு பணியாற்றியவர். எளிமையான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டான தோழர் கே.வைத்தியநாதன் இளைய தலைமுறையினருக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீர வரலாற்றை ஈடுபாட்டோடு விளக்குவார். எப்போதும் நாளிதழ்களையும். நூல்களையும் படிப்பவர். நம்மோடு வாழ்ந்து மறைந்துள்ள மூத்த தோழர்களில் ஒருவரான தோழர் கே.வைத்தியநாதன் நாட்டு நடப்புகளை, உலக நிகழ்ச்சிகளை மார்க்சியப் பார்வையில் பார்க்கும் அரசியல் தெளிவு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளாமல், கட்சி- தொழிற்சங்கம் என்பதைத் தவிர வேறு எதையும் அறியாத சுமார் 70 ஆண்டு காலப் பணி அவருடையது.
தமிழகத்தின் முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் கே.வைத்தியநாதன் 1925ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம்தேதி யன்று திருவாரூரில் பிறந்தார். கிருஷ்ண மூர்த்தி - பரிமளாம்பாள் தம்பதியரின் இரண்டாவது புதல்வராவார் வைத்தியநாதன். அவரது தந்தை யார் கிருஷ்ணமூர்த்தி முதலில் மதுராந்தகம் இந்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியராயிருந்தார். 1929ஆம் ஆண்டிற்குப்பின் சட்டம் பயின்று திரு வாரூரில் வழக்கறிஞரானார். அவரது சொந்த ஊர் தேரழுந்தூர் அருகில் உள்ள கோமல் கிராமமாகும். வசதியாக வாழ்ந்துவந்த குடும்பம் 1934ஆம் ஆண்டில் நெருக்கடியைச் சந்தித்தது. அவ்வாண் டில் சொந்த வீடு விற்கப்பட்டது. வாடகை வீட்டில் குடியேறியது.
வைத்தியநாதன், திருவாரூர் காலக்காரத் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மூன்றாவது வகுப்பிலிருந்து ஆங்கிலம் படித்தார். தினமும் மாலையில் தாத்தா விடம் கிரந்த லிபி கற்றுக் கொண்டார். ஐந்தாவது வகுப்பிலிருந்து திருவாரூர் உயர்நிலைப்பள்ளி யில் படிக்கலானார். அச்சமயத்தில் அவருடன் ராம சாமி, மாணிக்கம் என்ற இரு தலித் மாணவர்கள் படித்தனர். அவர்களுக்கு திருவாரூர் நகர காங்கிரஸ் கமிட்டி உதவித் தொகை கொடுத்து படிக்க வைத்தது. வைத்தியநாதன் தான் படித்ததையெல்லாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். அந்த இரண்டு மாணவர்களும் வைத்தியநாதனை விட இருமடங்கு வயதானவர்கள். வைத்தியநாதனுடன் இப்பள்ளியில் படித்த வர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் வி.தியாகராஜன். இவர் பின்னாட்களில் தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். ஒரு வகுப்பு முன்பு படித்தவர் வி.சாம்ப சிவம். இவர் பின்னாட்களில் நாகை நாடாளு மன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். வைத்தியநாதனை விட இரு வகுப்பு பின்பு படித்தவர் திமுக தலைவர் மு.கருணாநிதி.
1938ஆம் ஆண்டில் வைத்தியநாதன் 9ஆவது வகுப்பில் படிக்கும்போது அவரது தந்தையாருக்கு காச நோய் ஏற்பட்டது. தஞ்சை அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏப்ரல் மாதத்தில் இறந்து போனார். குடும்பம் வறுமையால் தத்தளித்தது. வைத்தியநாதன் படிப்பு நின்று போனது. இரண்டு ஆண்டிற்குப் பின் மீண்டும் தொடர்ந்தார். ஆனால் சம்பளம் கட்ட முடியாமல் 10ஆம் வகுப்பை கைவிட்டார். முதலில் தாத்தாவும் பின்னர் தாயாரும் ஒவ்வொருவராக இறந்து போனார்கள். உணவுக்கு வழியின்றி தங்க இடமின்றி வைத்தியநாதன் பட்டினியையும், பசியையும் தாங்க வேண்டியிருந்தது. அங்கிருந்த ஒரு கோவில் குருக்களுக்கு உதவியாளரானார். பூஜைக்கு சந்தனம் அரைத்துத் தரவேண்டும். கிணற்றிலி ருந்து தண்ணீர் இறைத்துத் தர வேண்டும். சாமிக்கு படைப்பதற்கு சோறு பொங்கித் தர வேண்டும். பூஜை முடிந்தபின் குருக்கள் தரும் ஒரு கட்டுச் சாதம் அவரது மதிய உணவு. இதர நேரத்தில் குருக்கள் வீட்டு உணவு கிடைக்கும். 1944 ஆம் ஆண்டு வரை இவ்வாறு அவர் வாழ வேண்டியிருந்தது.
அவ்வாண்டில் அவர் புனேயில் இருந்த ஒரு ராணுவ அதிகாரி வீட்டில் உதவியாளராகச் சேர்ந்தார். உணவு தயாரிப்பது உள்பட வீட்டு வேலை களை அவர் செய்ய வேண்டியிருந்தது. 2 ஆண்டு கழித்து வைத்தியநாதன் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார். அதன்பின் வைத்தியநாதன் திருவாரூரில் ரேசன் கடை ஒன்றில் கணக்கராக சேர்ந்தார். மாதச் சம்பளம் 45 ரூபாய். அச்சமயத்தில் அவர் 4 அணா செலுத்தி காங்கிரஸ் கட்சியின் உறுப்பின ரானார். அவரை உறுப்பினராக்கியவர் திருவாரூர் கே. தங்கராசு. இவர் பின்னாட்களில் திராவிடர்க் கழகத்தின் பிரபல தலைவராக விளங்கியவர். இச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவ ரும், வைத்தியநாதனுடன் பள்ளியில் படித்தவரு மான டாக்டர் தியாகராஜனுடன் அவருக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இது வைத்தியநாதனை படிப்படி யாக கம்யூனிஸ்ட்டாக்கியது.
கம்யூனிஸ்ட் கட்சி அப்பொழுது தடை செய்யப் பட்டிருந்ததால் “முன்னணி”, “குமாஸ்தா” என்ற பெயர்களில் பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. வைத்தியநாதன் இப்பத்திரிகைகளின் ஏஜெண்டா னார். அத்துடன் வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கத்தை யும் அங்கே பலப்படுத்துவதில் முன்னின்றார். 1950ஆம் ஆண்டுவாக்கில் வைத்தியநாதன் திருவாரூரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. கட்சித் தோழர்கள் மீது கடுமையான அடக்குமுறை ஏவப்பட்டிருந்தது. எனவே வைத்தியநாதன் காரைக்குடிக்குச் சென்றார். அங்கேயும் அடக்குமுறை தாண்டவ மாடியதும் வைத்தியநாதன் அங்கிருந்த மது விற்பனை இறக்குமதி கடையில் கணக்கராக வேலையில் சேர்ந்தார். அப்பொழுது புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகள் பிரெஞ்சுநாட்டின் காலனியாக இருந்தன. எனவே, அங்கேயும் சுதந்திரப் போராட்டம் நடைபெற்று வந்தது. வைத்திய நாதன் அதிலும் பங்கேற்றார். 1951இல் கட்சி மீதிருந்த தடை நீங்கியது. 1952ஆம் ஆண்டில் காரைக்காலில், வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கத்தை அமைக்கும் பணியில் வைத்தியநாதன் ஈடுபட்டார். 1954 ஆம் ஆண்டில் புதுவை கம்யூனிஸ்ட் தலைவர் வி.சுப்பையாவு டனும், வி.பி.சிந்தனுடனும் வைத்தியநாதனுக்கு தொடர்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து காரைக்காலில் வைத்திய நாதனுடைய கட்சிப்பணி அதிகரித்தது. கட்சியின் பிரதேசக் குழு உறுப்பினரானார். இதர பல பொறுப்பு களையும் அவர் வகித்தார். 1960ஆம் ஆண்டு மே மாதத்தில் அவர் புதுவையில் கட்சியின் முழு நேர ஊழியராக்கப்பட்டார். பாரதி மில்லில் சங்கப் பணிகளுக்கு பொறுப்பாளராக்கப்பட்டார். பின்னர் கட்சியின் புதுவை செயற்குழு உறுப்பினராகவும் வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரதிமில் போராட்டத்தின்போது வைத்தியநாதன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 1968ஆம் ஆண்டில் வைத்தியநாதன் கம்யூ னிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் பொறுப்பிலி ருந்து விலகி காரைக்காலுக்கு வந்துவிட்டார். 1969ஆம் ஆண்டில் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் காரைக்காலில் மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபட்டார். சுருட்டுத் தொழிலா ளிகள் இயக்கத்தை வளர்ப்பதிலும். நெடுங்காடு பஞ்சாலையில் சங்கத்தை உருவாக்குவதிலும் வைத்தியநாதன் ஈடுபட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவுப்படி வைத்தியநா தன் 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுவைக்குத் திரும்பி தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். பஞ்சாலை சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சமயத்தில் தான் போனஸ் கோரி பஞ்சாலைத் தொழிலாளிகள் மிகப்பெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வெற்றி பெற்றது. 1972 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் தொழிற்சங்க இயக்கத்தை வளர்ப்பதற்காக கட்சி அவரை அங்கே அனுப்பியது. தஞ்சையில் அவர் டான்டெக்ஸ் பனியன் தொழி லாளர் சங்கத்தை உருவாக்கினார். திருப்பூர் பின்னலாடை சங்கத்திற்கு இது முன்னோடியாக விருந்தது. தஞ்சாவூர் டெக்ஸ்டைல்ஸிலும் வைத்தியநாதன் சங்கத்தை உருவாக்கினார். கும்பகோணம் கை நெசவுத் தொழிலாளர் ஊதியம், முதலாளி - தொழிலாளி உறவு சம்பந்தமாக நடுவர் மன்ற விசாரணை தஞ்சையிலும், கும்ப கோணத்திலும் நடைபெற்றது. சங்கம் சார்பில் வைத்தியநாதன் இதில் வாதிட்டார்.
1973ஆம் ஆண்டில் சிஐடியுவின் தமிழ் மாநில அலுவலகம் மதுரையிலிருந்து செயல்படத் தொடங்கியது. வைத்தியநாதன் அலுவலக செயலாளராக நியமிக்கப்பட்டார். அதை கவனித்துக் கொண்டே அவர் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை தொழிலாளர் போராட்டம், சங்ககிரி சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டம் போன்ற வற்றிற்கு உதவினார். சிங்கம்புணரி ராயல் என்பீல்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐடிஐ மாணவர்கள் தங்கள் போராட்டத்திற்கு சிஐடியுவிடம் ஆதரவு கேட்டனர். வைத்திய நாதன் அங்கே சென்று சங்கம் உருவாக்கி போராட்டம் நடத்தினார். முதலில் மாணவர்கள் உண்ணாவிரதம் நடைபெற்றது. பின்னர் ஏஐடியுசி,சிஐடியு, அண்ணாதொழிற் சங்கம் சார்பில் வைத்தியநாதன் உண்ணாவிரதம் ஏற்பாடு செய்தார். சிஐடியு சார்பில் அவரே உண்ணா விரதத்தில் பங்கேற்றார்.
மூன்றாவது நாளில் அமைச்சர் மாதவன் தலை யிட்டு வாக்குறுதி அளித்ததின் பேரில் உண்ணா விரதம் முடிவுற்றது. சிவகாசியில் ஸ்டாண்டர்டு லித்தோ அச்சகத்தில் சிஐடியு தலைமையில் போராட்டம் நடந்த போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைவர் பால சுப்பிரமணியம் கைது. எனவே மதுரையிலிருந்து வைத்தியநாதனும், சுந்தரராஜனும் அங்கே சென்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்தனர். 1974 ஆம் ஆண்டின் பிரசித்தி பெற்ற ரயில்வே வேலைநிறுத்தத்தின் பொழுது வைத்தியநாதனும், ரயில்வே சங்கத் தலைவர்கள் பலரும் மதுரை யில் கைது செய்யப்பட்டு 27 நாட்கள் சிறையில டைக்கப்பட்டனர்.
1975-76 ஆம் ஆண்டுகளில் சேலம் மேக்ன சைட் தொழிலாளர் போராட்டத்தில் வைத்தியநாதன் பெரும் பங்காற்றினார். அதே போன்று குறைந்த பட்ச கூலி போராட்டத்திற்கும் அவர் உதவினார். மேட்டூரில் சிஐடியு சங்கங்கள் வளர்ச்சிக்கும் அவர் உதவினார். 1976 ஆம் ஆண்டில் பஞ்சாலைத் தொழிலா ளர் கூட்டுப்போராட்டக்குழுவில் பங்கேற்று பல மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார். சென்னை பின்னிமில் பிரச்சனையிலும் சிஐடியு சார்பில் அவர் பங்கேற்றார். அரியலூர், தாழை யூத்து போன்ற இடங்களில் சிமெண்ட் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியதிலும் வைத்திய நாதனுக்கு பெரும் பங்குண்டு.
1977ஆம் ஆண்டு சிமெண்ட் தொழிலாளர் சம்பள உயர்வுப் பிரச்சனைக்காக உருவாக்கப்பட்ட நடுவர் குழுவில்( arbitration committee) சிஐடியு சங்கங்கள் சார்பாக வைத்தியநாதன் சாட்சியம் அளித்தார். 1979ஆம் ஆண்டில் தமிழக சிஐடியு சிமெண்ட் தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு கூட்டத்தில் வைத்தியநாதன் அதன் அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழுவில் கே.கரு ணாகரனுடன் வைத்தியநாதனும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு சர்க்கரைத் தொழிலாளர் சம்மேள னத்தின் தலைவராக, தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் உதவித் தலைவ ராக, தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக, தமிழ்நாடு கைத்தறித் தொழிலாளர் சம்மேளத்தின் உதவித் தலைவராக அவர் பல ஆண்டுக்காலம் செயல்பட்டார்.
1972ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிஐடியு வின் தமிழ் மாநில நிர்வாகிகளுள் ஒருவராக இருந்து வருகிறார். சிஐடியுவின் அகில இந்திய பொ துக்குழுவிலும், செயற்குழுவிலும் பல ஆண்டுக் காலம் செயல்பட்டுள்ளார். அகில இந்திய பீடித் தொழிலாளர் சம்மேள னத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அகில இந்திய சர்க்கரைத் தொழிலாளர் சம்மேளனத் தின் உதவித் தலைவராகவும், சர்க்கரைத் தொழிலாளிகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு விலும் அவர் பல வருட காலம் செயல்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் கட்டுமானத் தொழிலா ளர் சங்கம், குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கம், டான்சி தொழிலாளர் சங்கம் போன்ற வற்றின் உருவாக்கத்திற்கு வைத்தியநாதன் பெரிதும் உதவியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினராக 17 ஆண்டுக்காலம் அவர் பணியாற்றினார். 1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவருக்கு ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. செப். 9ஆம் தேதியன்று கோவையில் நடைபெறவிருந்த போனஸ் பேச்சுவார்த்தைக்காக 8ஆம் தேதி இரவில் அவர் கோவை புறப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பேருந்தில் சென்ற அவர், அதிலிருந்து இறங்கும் பொழுது அவரது இடது கால் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறி பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை குணப்படுத்த சிஐடியு ஏராளமாகச் செலவிட்டது என்றாலும் அவரால் முன்பு போல் நடக்க இயலவில்லை. எனவே, அலுவலகத்திலேயே தங்கி, சங்கங்க ளுக்கு வழிகாட்டும் வேலையைச் செய்து வந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களில் சங்கம் வைத்து அந்தத் தொழிலாளிகளோடு நெருக்க மாகப் பழகி தொழிற்சங்க இயக்கத்தை, குறிப்பாக சிஐடியுவை வளர்த்த பெருமை கே.வைத்திய நாதனுக்கு உண்டு!