tamilnadu

ராபர்ட் வதேரா மீதான வழக்குகளின் விசாரணை அதிகாரி மாற்றம்

புதுதில்லி, ஜுன் 4-பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீதான வழக்குகளை விசாரித்து வரும், விசாரணை அதிகாரியை அமலாக்கத்துறை மாற்றியுள்ளது.சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துக்கள் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ராபர்ட் வதேராமீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செவ்வாயன்று 13வது முறையாக ராபர்ட் வதேரா ஆஜரானார்.இதனிடையே அவரது வழக்குகளை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி ராஜீவ் ஷர்மா விடுமுறையில் சென்றுள்ளதால், மகேஷ் குப்தா என்ற புதியஅதிகாரியை அமலாக்கத்துறை நியமித்துள்ளது. இன்றைய விசாரணையின் போது ராபர்ட் வதேரா அளித்த பதில்களை புதிய அதிகாரி மகேஷ் குப்தாவே பதிவு செய்தார்.