tamilnadu

img

அரசியல் சட்டத்தை கட்சிகள் பாதுகாக்க வேண்டும்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் 

ஜெய்ப்பூர்,செப்.8- உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுய அதிகாரத்துடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க கட்சிகள் உறுதிகொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். ஜெய்ப்பூரில் லட்சுமிபத் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மன்மோகன் சிங்  உரையாற்றுகையில்,  ஜனநாயகத்தை வலிமைப்படுத்த தொலைநோக்குடைய தலைவர்கள் தேவை.  அரசியல் சட்டத்தை பாதுகாக்க கட்சிகள் உறுதிகொள்ள வேண்டும். அரசு என்பது நீதியை வழங்குவதாக இருக்க வேண்டும், சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அளிப்பதாக இருக்க வேண்டும்.  அத்தகைய சூழ்நிலையில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் சம அளவிலான மரியாதை கிடைக்க வேண்டும்.  உச்சநீதிமன்றம், சிபிஐ, தகவல் ஆணையம், போன்ற பல்வேறு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.