tamilnadu

img

‘கோவைக்கு புதிய மாஸ்டர் பிளான்’

கோயம்புத்தூர், மே 19-  கோவை தொழில் முனைவோருடன் வியாழனன்று நடைபெற்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதோடு விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும். வளம் மிக்க இந்த மாவட்டத்தை மேலும் வலுப்படுத்த புத்தாக்கம், தகவல் தொடர்பு நுட்பம் வான்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வழங்கும் புதிய மைய மாக “நியூ ஆப் ஃபார் இன்ஜினியரிங் டெக்னாலஜி” உருவாக்கப்படுவதோடு கோவையின் கட்டமைப்பு தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் புதிய மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். சிட்கோ, டிக்டோ, சிப்காப், டான்சிட்கோ ஆகிய அரசு நிறுவனங்களை இணைந்து அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும். தெற்கு ஆசியாவில் முதலீடுகளை மேற் கொள்வதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு ஆக இருக்க வேண்டும் என்பதைக் குறிக் கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

சிறுகுறு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 360 கோடி ஒதுக்கப்பட்டு, 3522 நிறுவனங்களுக்கு மானி யம் வழங்கப்பட்டுள்ளது. கடன் உத்தரவாத திட்டம், குறைந்த விலையில் தொழில்மனை கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப் படும் ஜியோடெக்ஸ்டைல் மற்றும் தென்னை  நாரை பிரபலபடுத்தி மாநிலம் முழுவதும் கயிறு தொழில் குழுமங்களை மேம்படுத்த வும், “தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்” கோவையில் தொடங்கப்படும். இதற்கு முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் மூலதனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் வித மாக மூன்று மண்டல அளவிலான புத்தொ ழில் மையங்கள் அமைக்கப்படும். ஈரோடு,  திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மானியத்துடன் நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜவுளித் துறையில் புதிய மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சிப் பயன்பாடு உலகளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த சூழலை நன்கு பயன் படுத்திக் கொண்டு தமிழகத்தில் சிப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற் கொண்டு தொழில்துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும். கோவை யை மையமாக வைத்து செயல்பட்டு வரும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள்  தொடர்பான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.  நூல் விலை உயர்வு மேற்கு மண்ட லத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பலர் தங்கள் வேலையை இழக்க நேரிட்டுள் ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பலரும் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டின் பொருளாதாரம் பன் முறை பொருளாதாரமாக மாற வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. இவ்வாறு முதல்வர் கூறினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் நிர்வாகி கள், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மு.அன்பரசன், தொழில்துறை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;