சென்னை,ஆக.7- சென்னையையும் ஹைதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங் களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவை ஆகஸ்ட் 7 அன்று துவங்கியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்துள்ள ஹைதராபாத் நகருக்கு சென்னையில் இருந்து அன்றாடம் ஆயிரக்கணக் கானவர்கள் செல்கின்றனர். இதேபோல், ஹைதரா பாத்தில் இருந்து சென்னைக் கும் பலர் வந்து செல்கின்ற னர். ரயில் அல்லது பேருந்து மூலம் சென்று வருபவர்கள் சுமார் 12 மணி நேரம் பய ணிக்க வேண்டியுள்ளது. ஆனால் விமானம் மூலம் சுமார் ஒன்றைரை மணி நேரத்தில் சென்றடைய முடியும். இந்நிலையில் சென்னை யையும் ஹைதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமி டங்களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவையை ‘கோ ஏர்’ நிறு வனம் ஆகஸ்ட் 7 புதனன்று துவங்கியுள்ளது. தினந்தோறும் காலை 11.05 மணிக்கு ஹைதரா பாத்தில் இருந்து புறப்படும் (தடம் எண்:503) விமானம் பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடை யும். சென்னையில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப் படும் (தடம் எண்:504) விமானம் 1.55 மணிக்கு ஹைதராபாத் சென்றடை யும். கோ ஏர் நிறுவனத்தின் இந்த புதிய விமானச் சேவைக் கான பயணக் கட்டணமாக 2099 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.