சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி, 4-வது அவென்யூ பகுதியில் இன்று காலை சுமார் 15 அடிக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பள்ளத்தைச் சுற்றி தடுப்பு வளையங்களை ஏற்படுத்தினர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் ஒன்றை வரவழைத்து, அதன் மூலம் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகாமையில்தான் சில நாட்களுக்கு முன் மெட்ரோ ரயில் தடத்துக்கான பணி நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக பள்ளம் ஏற்பட்டதா என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.