மோடி அரசாங்கம், இந்தியத் தேசியக் குடி மக்கள் பதிவேடு தயார் செய்வதற்காக இதுவரையிலும் எவ்வித முடிவும் எடுக்க வில்லை என்று நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக் கிறது. எழுத்துப்பூர்வமான கேள்விக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணை அமைச்சர், நித்யானந்த் ராய், இவ்வாறு பதில் அளித்துள்ளார். இது, 2019 டிசம்பர் 22 அன்று தில்லியில் நடைபெற்ற பேரணி/பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் தாங்கள் 2014இல் பதவியேற்றதிலிருந்து தேசியக் குடி மக்கள் பதிவேடு குறித்து எவ்விதமான விவாதமும் மேற் கொள்ளவில்லை என்று பேசியதுடன் ஒத்துப்போகிறது. இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் விதத்துடன் அவிழ்த்துவிடப்பட்டுள்ள பாதி உண்மைகளாகும். பாதி உண்மைகள் என்று ஏன் சொல்கிறோம் என்றால், தேசியக் குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் எவ்விதமான விவரங்க ளும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இதனைத் தயார் செய்வதற்கான நடைமுறையின் ஒரு பகுதியாக, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தொடங்கியிருக்கிறது.
தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதன் முதல் கட்டம்தான் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்றும், அதற்காகத்தான் மேம்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேடு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப் பட்டபோது, அரசாங்கம் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டு க்கும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கும் எவ்வித சம்பந்த மும் இல்லை என்று கூறி மறுத்தது. இது அப்பட்டமான பொய்யாகும்.
1955 குடியுரிமைச் சட்டத்திற்கு, 2003இல் இந்தியக் குடிமக்கள் தேசியப் பதிவேட்டின் கருத்தாக்கத்தை அறிமுகப் படுத்தி, ஒரு திருத்தத்தை, அப்போது ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசாங்கம் நிறைவேற்றியது என்பது பிரதம ருக்கும், இதர மத்திய அமைச்சர்களுக்கும் நன்கு தெரியும். இந்தப் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான், இந்தச் சட்டத்திருத்தத்தின் கீழ் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான விதிகள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, ஒரு வசிப்பிடத்தில் வழக்கமாக வாழ்கின்ற அனைவரையும் உள்ளடக்கி இருக்கும். இதில் அடங்கியுள்ள கேள்விகளுக்கு, குடும்பத் தலைவரிடமி ருந்து பெறுகின்ற பதில்கள், உள்ளூர் பதிவாளரால் மக்கள் தொகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இதில் “சந்தேகப் படும் குடிமக்கள்” குறித்து, சரிபார்க்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இவை அனைத்தும் முடிந்தபிறகு, தேசியக் குடிமக்கள் பதிவேடு இறுதிப்படுத்தப்படும்.
2003 குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடை யாள அட்டைகள் வழங்கல்) விதிகளில், 4ஆவது பிரிவில், இந்தியக் குடிமக்கள் தேசியப் பதிவேட்டின் தயாரிப்பு குறித்து கூறப்பட்டிருப்பதாவது: “மக்கள்தொகைப் பதிவேடு, உள்ளூர் பதிவாளரின் அதிகாரவரம்பெல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழக்கமாக வாழும் அனைத்து நபர்கள் தொடர்பாகவும், தகவல்கள் தொகுக்கப்படுவதன் மூலமாக தயாரிக்கப்படும். (தேசியப் பதிவாளரின் ஓர் அங்கமாகச் செயல்படும்) இந்தியக் குடிமக்களின் உள்ளூர் பதிவாளர், மக்கள் தொகைப் பதிவேட்டிலிருந்து உரிய சரிபார்த்தலை மேற்கொண்ட பின்னர், நபர்களின் விவரங்களைத் தொகுப்பார்.” இதிலி ருந்து, மக்கள்தொகைப் பதிவேடு சரிபார்க்கப்பட்டபின்னர், தேசியக் குடிமக்கள் பதிவேடு இறுதிப்படுத்தப்படும் என்பது போதுமான அளவிற்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிப்புப் பணிகள் முடிந்தபின்னர்தான், தேசியக் குடிமக்கள் பதிவேடு, குடி யுரிமைச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தொகுக்கப்பட முடியும். ஆகையால், 2019 ஜூலை 31 அன்று தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்து வெளியிடப்பட்டுள்ள மோடி அரசாங்கத்தின் அறிவிக்கை, தேசியக் குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிப்பதற் கான நடைமுறை துவங்கிவிட்டதைக் காட்டுகிறது. இந்தச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தொகுக்கப்படும் அனைத்து விவரங்களின் ஒரே நோக்கம், அவற்றைத் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான அடிப்படையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்காக எவ்விதமான பேச்சு வார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மோடி சாதுரி யமாகத் தட்டிக்கழித்த இரு நாட்களுக்குப் பின்னர், மத்திய அமைச்சரவை கூடி, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை மேம்படுத்துவதற்காக 3,941 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கி றது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு மேம்படுத்தப்பட்டிருப்ப தன் அடிப்படையில், ஒவ்வொரு வீடாகச் சென்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (Census house listing) முதல் கட்டம் அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30க்குள் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இவற்றின் மூலமாக மத்திய அரசு மக்களிடமிருந்து மறைத்துள்ள சங்கதிகள் என்னவெனில், தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்காகப் புதிய சட்டம் எதுவும் தேவை இல்லை என்பதும், அது குறித்து நாடாளுமன்றத்தின் அனுமதியை யும் பெறவேண்டிய அவசியம் இல்லை என்பதுமாகும். தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்காக ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்பு முடிந்தபின்னர், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை இறுதிப்படுத்துவது என்பது ஒரு நிர்வாகரீதியான முடிவு மட்டுமேயாகும். தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக் கான கணக்கெடுப்புகள் முடிந்த அந்த நொடியே, தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகளும் முடிந்ததாக மாறிவிடும்.
இப்போது பிரதமரும், உள்துறை அமைச்சரும் கூறு வதற்கு முற்றிலும் முரணாண விதத்தில், அரசாங்கத்தின் சரி யான நிலைப்பாட்டை, உள்துறை அமைச்சகம் தன்னுடைய 2018-19 ஆண்டறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது: “நாட்டில் வழக்கமாக வசிப்போர் அனைவரிடமிருந்தும் குறிப்பிட்ட தகவல்களைப் பெறுவதன் மூலம் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அர சாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு இந்தியக் குடிமக்கள் தேசியப் பதிவேட்டை (NRIC-National Register of Indian Citizens) உரு வாக்குவதை நோக்கி, எடுத்துவைக்கப்படும் முதலடியாகும். 2010இல் மக்கள்தொகைப் பதிவேட்டுக்காக சேகரிக்கப்பட்ட மக்கள்தொகை தொடர்பான தரவுகள் 2015இல் மேம் படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத்திட்டத்தின்கீழ் 33.43 கோடி நபர்களுக்கான பயோமெட்ரிக் சேர்க்கைப் பதிவுகள் ஏற்கெனவே செய்யப்பட்டு விட்டன.”
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடியுரி மைப்பதிவேடு ஆகியவற்றிற்கு நாடு முழுதும் எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருப்பதை எதிர்கொண்டுள்ள மோடி அரசாங்கம், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டு நடைமுறையை கள்ளத் தனமாகவும், கபடத்தனமாகவும் மேற்கொண்டிடத் தீர்மானித்திருக்கிறது. தேசிய மக்கள்தொகைப்பதிவேட்டுக் கான நடைமுறை, தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று மக்களுக்குக் கூறுவதன்மூலம் இதனைச் செய்துவிடலாம் என்று அது நம்புகிறது.
தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடைமுறைக்கு, 2015இல் மேம்படுத்தப் பட்ட கேள்விகளுடன் மேலும் பல விவரங்களைச் சேகரித்திட திட்டமிட்டிருக்கிறார்கள். அதாவது, ‘ஆதார்’ அட்டை, மொபைல் எண், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை புதிய கேள்வித்தாளில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் பதிவு செய்யப் படும் நபருடைய பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் பிறப்பிட மும் கோரப்பட்டிருக்கிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் போன்று சில பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களே, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கு பதிவு செய்யப்படும் நபருடைய பெற்றோரின் பிறப்பிடம் போன்ற கேள்விகளைக் கேட்காவிட்டால், பின் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக் கான நடைமுறையை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுபோல் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது பிரச்சனை யைத் திசைதிருப்பும் வேலையேயாகும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக கேட்கப்படும் கேள்விகள் அனைத் துமே, இவர்கள் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்காக, சரிபார்த்தலுக்கான அடிப்படை யாக அமைந்திடும். குடும்ப உறுப்பினரிடமிருந்து சேகரிக் கப்படும் தரவுகள் திருப்தியளிக்கவில்லை எனில், பின் அவர் களுக்கு, தங்களுடைய குடியுரிமையை மெய்ப்பிப்பதற்கான சான்றுகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவிப்பு அனுப்பப் படும். அந்த சமயத்தில் அவர்களுடைய பெற்றோர் அல்லது பெற்றோரின் பெற்றோர் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட முடியும்.
எனவேதான், தேசியக் குடிமக்கள் பதிவேடு தேவை யில்லை என்று கூறுகிற நிதிஷ் குமார் போன்றவர்களும்கூட, பீகாரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டு நடைமுறை யைத் தொடரக் கூடாது. உண்மையில், தேசியக் குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என்று கூறுகிற அனைத்து முதல மைச்சர்களும், கேரளாவில் செய்திருப்பதைப்போல, தங்கள் மாநிலங்களில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை நிறுத்துவது அவசியமாகும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
மோடி அரசாங்கம், தாங்கள் தேசியக் குடிமக்கள் பதி வேட்டைத் தொடரப்போவதில்லை என்பதில் நேர்மையான தாக இருப்பின், அது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக் கான அறிவிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும். சென்சஸ் எனும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே எடுக்கப்படும் என்று அறிவித்திட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி