திருவனந்தபுரம், மே 28- 1987 ஆம் ஆண்டு ஸ்ரீலேகாதான் கேர ளத்தின் முதலாவது ஐபிஎஸ். அந்த ‘முதலாவது’ என்பதில் மற்றொரு மகுடமாக அவரது தொப்பி யில் மிளிர்கிறது கேரளத்தின் முதலாவது டிஜிபி என்னும் நட்சத்திரம். இவர் பொறுப்பு ஏற்கும் தீயணைப்புத்துறையிலும் முதலாவது பெண் தலைவர் இவர்தான். மாநிலத்தின் முதலாவது பெண் சிறைத்துறை தலைவர் என்கிற பெருமையும் இவருக்கு உள்ளது. தற்போது இவர் போக்குவரத்துத் துறையின் ஆணையராக உள்ளார். 2018இல் ஸ்ரீலேகா உட்பட 4 அதிகாரிகள் டிஜிபி தகுதிக்கு உயர்த்தப்பட்டனர். கேரளத்தில் முதலாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக கோட்டயம் ஏஎஸ்பி பொறுப்பை ஏற்றார். 1991இல் கேரளத்தின் முதலாவது பெண் எஸ்பியாக திருச்சூர் மாவட்டத்தில் பொறுப்பேற்றார். பத்த னம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களிலும் எஸ்பியாக பணியாற்றினார். காவல்துறை மாநில தலை மையகத்தில் ஏஐஜியாகவும் நான்கு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். சிபிஐ கொச்சி பிரிவி லும் பணியாற்றினார். விஜிலன்ஸில் பணியாற்றி யபோது சிறந்த சேவைக்கான குடியரசுத்தலை வரின் விருது பெற்றார். எர்ணாகுளம் பயிற்சி டிஐஜி ஆன பிறகு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை வகித்தார். ரப்பர் மார்க்கெட்டிங் பெடரேசன், கேரள மாநில கட்டுமான வாரியம், சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி யுள்ளார். புத்தகங்களும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார்.