tamilnadu

img

மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு...

சென்னை:
சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வரும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு இயல்பைவிட 24 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது.இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மன்னார் பகுதியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அங்கு பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகப்படியாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.