tamilnadu

img

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...

சென்னை 
தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய  வாய்ப்புள்ளது.  

மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஜூன் 9 முதல் 11 வரை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா கடலோர பகுதியில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று  வீசும். ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதி பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வீசும்.ஜூன் 11 மற்றும் ஜூன் 12 லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வீசும்.ஜூன் 13 கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வீசும்.  குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ் கோடி வரை ஒருசில நேரங்களில்  கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்ட்ச வெப்பநிலை 38 டிகிரி குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;