புதுச்சேரி,அக்.18- மேற்கத்திய இசைக் கருவியான சாக்ஸ போன் கலைஞர் பத்மஸ்ரீ கத்ரிகோபால்நாத் மறைவுக்கு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி லாசுப்பேட்டை கிளை சார்பில் கிழக்கு கடற் கரை சாலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. தமுஎகச வின் தமிழ்மாநிலக்குழு உறுப்பி னர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில பொருளாளர் ராமச்சந்திரன், முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க பிர தேச தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் உமா அமர்நாத், கவிஞர்.லெனின்பாரதி, முனைவர்.கண்ணமங்கை (இசைத்துறை, பாரதியார் பல்கலைக் கூடம்) முனைவர்.சிவக்குமார், சங்கீத பூஷணம் வி.ஜெகதீசன், கவிஞர் வில்லியனூர் பழகி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மேற்கத்திய இசைக் கருவியான சாக்ஸ போனை இந்திய இசைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து, அதற்கெனதனியே ஒரு மிரு தங்க இசையையும் வடிவமைத்து பல்வேறு ராக ஆலாபனைகளையும், கமுக்கங்களையும் சிறப்பாக இசையமைத்து வாசித்து சாதனை செய்ததை நினைவு கூர்ந்து பேசினர்.