tamilnadu

img

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தொடர் போராட்டம்

சென்னை, ஜூன் 7- தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையிலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவர்கள் அளித்த தேர்தல்கால வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதி யம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன் வாடி, ஊர்ப்புற நூலகர், எம்.ஆர்.பி. செவிலியர் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சட்டப்படியான ஓய்கூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பு, காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஜூன் 20 முதல் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

7 மையங்களிலிருந்து பிரச்சாரம்

ஜூன் 20ஆம் தேதி இராமேஸ் வரம், கன்னியாகுமரி (களியக்கா விளை), வேதாரண்யம், புதுக்கோட் டை, கூடலூர், தர்மபுரி (ஒகேனக்கல்),  திருவள்ளூர் ஆகிய 7 மையங்களி லிருந்து 20.6.2022 முதல் 24.06.2022 வரை 5 நாட்கள் ஊழியர் சந்திப்பு பிரச்சாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஆயத்த மாநாடு

எஸ்மா, டெஸ்மாவில் 1 லட்சத்து 76 ஆயிரம் பேரை பதவிநீக்கம் செய்த ஜூலை 2 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு, கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளது.

தர்ணா

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜூலை 26ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்.

கோட்டை நோக்கி பேரணி

இவற்றிற்கு பிறகும் கோரிக்கை களை நிறைவேற்ற அரசு முன்வர வில்லை என்றால் ஆகஸ்ட் 23இல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்கும் கோட்டை நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அப்போதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 2003இல் நடைபெற்றது போல் வேலை நிறுத்தம், சாலை மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது, துணைப் பொதுச்செயலாளர் தெ.வாசுகி, மாநிலச் செயலாளர்கள் உ.சுமதி, அம்சராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் நா.வினோத்குமார், வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.அந்தோணிசாமி. மாவட்டத் தலைவர் ப.சுந்தரம்மாள், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கன், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர்.