தஞ்சை மாவட்டம் திருவையாறில் சனிக்கிழமை நடைபெற்ற 173 வது ஆண்டு தியாகராஜர் ஆராதனை விழாவை தொடங்கி வைப்பதற்காக இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு தஞ்சைக்கு வருகை தந்தார். அவரை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் தஞ்சை விமானப்படை விமான நிலையத்தில் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.