கும்பகோணம், பிப்.2- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி சாவடி தெருவில் ரேஷன் கடை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை பெற்று பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பொதுமக்க ளுக்கு வழங்கிய ரேஷன் அரிசியில் புழுக்கள் மிகுதியாக இருந்தது. இத னால் உலகமெங்கும் வைரஸ் மற்றும் காய்ச்சல் பரவி வரும் இந்த நேரத்தில் தமி ழக அரசே புழுக்கள் உள்ள அரிசியை விநியோகிப்பது கண்டனத்துக்குரியது என கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. இதனால் அன்றாட கூலி வேலை செய்யும் பொதுமக்கள், புழுக்கள் நிறைந்த சுகாதாரமற்ற ரேஷன் அரிசி யை வாங்கும் நிலை நிலவி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலக்காவேரி சாவடியில் உள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்து புழுக்கள் உள்ள அரிசியை அப்புறப்படுத்தி சுத்த மான ரேஷன் அரிசியை மக்களுக்கு உடன் வழங்க வேண்டும் என கும்ப கோணம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மீண்டும் இப் பிரச்சனை தொடர்ந்தால் மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.