tamilnadu

img

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

 தஞ்சாவூர், செப்.5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் சி.ராணி தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் யுவராஜ் உரை யாற்றினார். கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சி யர் கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, சுப்பிர மணியன், பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜசேகர், மருததுரை, கார்த்திகேயன், திவ்யா கலந்து கொண்டனர். மேலும் மாணவ, மாணவிகளிடமிருந்து, வாக்காளர் பெயர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப் பட்டன.

;