tamilnadu

img

தோழர் என்.வெங்கடாசலம் நினைவிடத்தில் அஞ்சலி...

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம், இராயமுண்டான்பட்டியில் உள்ள தியாகி என்.வி. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர்கள் கே.ரமேஷ், ஆர்.கே.பெரியசாமி, ஆர்.தீபன், வி.சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். என்.வி.நினைவிடத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரை, பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கட்சிக் கொடியேற்றி வைத்தார். விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் மாவட்டக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;