tamilnadu

img

ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு  

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (ஆவணம் இருப்பு) கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கி யது. பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தவமணி, சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் வரவேற்றார். பயிற்றுநர்கள் நடராஜன், சோபா ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும், உறுப்பி னர்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. 3 நாட்களுக்கு  நடைபெறும் பயிற்சியில் முதல் கட்டமாக 90 ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். மற்ற உறுப்பினர்களுக்கு செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களுக்கு பயிற்சி நடை பெற உள்ளது. நிறைவாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கர்ணன் நன்றி. 

;