tamilnadu

இன்று கும்பகோணத்தில் கலை இலக்கிய இரவு

 கும்பகோணம், ஜூலை 18- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் குடந்தை கிளை நடத்தும் குடந்தையை கொண்டாடுவோம் கலை இலக்கிய இரவு- 2019 நிகழ்ச்சி ஜூலை 19 மாலை 5 மணி முதல் விடிய விடிய கும்பகோணம் மார்னிங் ஸ்டார் பள்ளி அருகில் நடைபெறுகிறது. முன்பாக கும்பகோணம். மாலை 5 மணி மகாமக குளக்கரை அண்ணா சிலையிலி ருந்து பறையாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டத்துடன் கலைப் பேரணி மாலை 6 மணி. சென்னை மாற்று ஊடக மையம் பேரா.காளீஸ்வரன் கலைக்குழுவினரின் பறை யாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், ஒயி லாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள்.  சிரிக்க சிந்திக்க புதுகை பூபாளம் கலைக் குழுவின ரின் நையாண்டி தர்பா, கிராமிய இசை மழையில் நனைய கரிசல்குயில் குழுவினரின் பாடல்கள். நாட்டின் பிக்பாஸ் மக்களே...! அரசே...! பட்டிமன்றம் நடுவர்: மதுக்கூர் இராம லிங்கம். குடந்தையின் எழுத்தாளுமைகள் கவிஞர் நந்த லாலா சிறப்புரை. குடந்தையின் வரலாற்று சிறப்புகள் கவி ஞர்.களப்பிரன் சிறப்புரை. கவிதைகள், நடனம், நாடகம். மேலும் குடந்தையின் எழுத்தாளுமைகள் மற்றும் கலை ஞர்களை சிறப்பித்தல் என விடிய விடிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.