தஞ்சாவூர், அக்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சாலைகளைச் சீர மைக்க வலியுறுத்தி, எருமை மாடுகளை நடுச் சாலையில் நிறுத்திக் குளிப்பாட்டும் போராட்டம் செவ்வாய்க்கிழ மை காலை, செங்கிப்பட்டி கிளைச் செயலாளர் ஜெ. சந்திரபோஸ், அயோத்தியா பட்டி கிளைச் செயலாளர் ஏ.ஜி.தங்கவேல் தலைமை யில் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. “கந்தர்வக்கோட்டை சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண் டும். கந்தர்வக்கோட்டை சாலை கீழ்ப்புறத்தில் வியா பாரக் கடைகளை உரசிச் செல்லும் மின் கம்பியையும், சாய்ந்துள்ள மின்கம்பத்தை யும் உடனடியாகச் சரி செய்ய வேண்டும். திருச்சி தஞ்சை (பாலத்தின் இரு புறங்களி லும்) முதன்மைச் சாலை, செங்கிப்பட்டி பேருந்து நிறுத் தத்தில் குளம் போல் காட்சி யளிக்கும் சாலையைச் சரி செய்ய வேண்டும். சாக்கடை நீரை அகற்ற மதுகான் நிறு வனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சானூரப்பட்டி யில் உள்ள கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்” என வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து, எருமை மாடுகளுடன் சானூரப்பட்டி யில், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், கே.தமிழரசன், சோலை.ரமேஷ், பி.தங்க மணி, பி.குணசேகரன், டி. தமிழ்ச்செல்வன், எஸ்.சிவன்ராஜ், டி.ஆரோக்கிய சாமி, பி.வின்சென்ட் ராஜ், சி.கோவிந்தராசு, எஸ்.சிவ குமார், என்.எஸ்.கே. சுப்பிர மணியன் உள்பட ஏராளமா னோர் திரண்டனர். தகவலறிந்து அங்கு வந்த பூதலூர் வட்டாட்சியர் சிவக்குமார், பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணை யர்கள், காந்தரூபன் மதுக் கான் நிறுவன மேலாளர், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, மின் வாரியத் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அருகிலுள்ள கிராமச் சேவை மையத்தில் அமர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், “சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீர் அகற்றப்படும், சாய்ந்த மின் கம்பங்கள், தொங்கும் மின் கம்பிகள் சரி செய்யப்படும், நவீன கழிப்பறை வசதி செய்து தரப்படும். மேலும் கோரிக்கைகள் அனைத் தும் உடனடியாக நிறை வேற்றித் தரப்படும்” என அதிகாரிகள் உறுதி அளித்த னர். இதையடுத்துப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப் பட்டது.