தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே திருக்கானுர்பட்டி புனித அந்தோணியார் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஆட்சியர் ம.கோவிந்தராவ் போட்டியை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700 காளைகளை பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ப்ரிட்ஜ், சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக வீரர்களின் உடல் நலமும், அவர்கள் மது அருந்தி உள்ளனரா என்பதை கண்டறிவதற்காக 7 மருத்துவர்கள் குழுவினர் வீரர்கள் கடும் பரிசோதனைக்கு பிறகே களத்தில் அனுமதித்தனர். அதே போல் காளைகளையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். காளைகள் அடக்கும் போது வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர். காளைகள் அவ்வப் போது பார்வையாளர்கள் பகுதியில் ஓடி முட்டியதால் 37 பேர் காயமடைந்தனர்.