tamilnadu

அரசியல் சாசனத்தை பாதுகாக்க கோரி தெருமுனைப் பிரச்சாரம்

தஞ்சாவூர், பிப்.3- தஞ்சை மாவட்டத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.  பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, வி.தொ.ச மாநிலக் குழு உறுப்பினர் ஏ.மாலதி தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார். ஒன்றியத் தலைவர் விஸ்வநாதன், பி.கே.ஆர். இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திருவையாறு ஒன்றியம் மணத்திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பிரதீப் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராம் மற்றும் அப்பகுதி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  அம்மாபேட்டை ஒன்றியம் கோவிலூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, சிபிஐ ஒன்றிய செயலாளர் ஏ.நம்பிராஜன், நிர்வாகிகள் கே. முனியாண்டி, வி.ரவி, கோவிலூர் ஜமாத் நிர்வாகிகள் பீர் முகம்மது, அப்துல் சமது பள்ளிவாசல் இமாம் சுல்தான் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், விவசாயத் தொழிலாளர்கள்  கலந்து கொண்டனர்.