tamilnadu

img

தகவல் உரிமைச் சட்டத்தில் 30 நாளுக்குள் அலுவலர்கள் பதில் அளிக்க வேண்டும் மாநில ஆணையர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 24- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பொதுத் தகவல் அலு வலர்கள் 30 தினங்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் தெரிவித்தார். தஞ்சாவூர் ஆட்சியர் அலு வலகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் ஆர். பிரதீப்குமார் கலந்து கொண்டு 20 வழக்குகளை விசாரித்தார்.  இதன்பின் அனைத்து அரசு அலுவலர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்து க்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதீப்குமார் பேசிய தாவது: ‘அரசு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை கனிவு டன் நடத்த வேண்டும். அவர்கள் கேட்கும் விவரங்களை அப்போதே கொடுத்துவிட்டால், அவர்கள் தக வல் பெறும் உரிமைச் சட்டத்திடம் வரவாய்ப்பில்லை. இந்த சட்டம் என்பது இன்னொரு சுதந்திரமாக கருதப்படுகிறது. ஒருவர் 25 கேள்விகள் வரை கேட்கலாம், அதற்கு பதில் அளிப்பது அரசு அலுவலர்களின் கடமையாகும்.  ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட் டால் 30 நாட்களுக்குள் பதில் வழங்க வேண்டும், அவ்வாறு இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரர் மேல் முறையீடு என்ற வரம்புக்குள் வரவே கூடாது. ஒவ்வொரு அரசு  அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலரின் பெயர், பதவி, தொலைபேசி எண் கட்டாயம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.  பொதுமக்கள் வழங்கும் மனுக் களை அதிகாரிகள் படித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பலர் மனுக்களை படிப்பதே இல்லை. அதே போல் தேடியதில் உரிய ஆவணங்கள் இல்லை என்ற பதிலை யாரும் அளிக்கக் கூடாது, அந்த ஆவணங்களை தேடி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.  பெரும்பாலும் வருவாய்த் துறை தொடர்பான மனுக்கள் தான் அதிகம் வருகிறது. நிலம், நீர்நிலைகளை பாதுகாத்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் தயக்கம் காட்ட வேண்டாம்’ என்றார்.