tamilnadu

img

மீதி இடமும் பறிபோனது தவிக்கும் பேராவூரணி வாரச்சந்தை வியாபாரிகள் மாற்று இடம் வழங்க கோரிக்கை

தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை, அறந்தாங்கி சாலையில், நீல கண்டப் பிள்ளையார் கோயில் அருகே உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த வாரச்சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதி களைச் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மளிகை, காய்கறி போன்ற பொருட்களை வாங்க வருவர்.  இந்த சந்தையை நம்பி சிறு வியாபாரி கள், விவசாயிகள், தலைச்சுமை வியாபாரி கள் என நூற்றுக் கணக்கானோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும், வீடுகளில் வளர்க்கும் கோழிகள், விளையும் காய்கறி களை கொண்டு வந்து விற்று பணமாக்கிச் செல்லும், ஏராளமான பெண்களுக்கும் பேராவூரணி வாரச்சந்தை தாய்மடி போல உள்ளது.  இந்நிலையில் சேதுசாலையில் இயங்கி வந்த பேருந்து நிலையம், போதிய வசதிகள் இன்றி இருப்பதாலும், நெருக்கடியாக இருந்த காரணத்தாலும், வாரச்சந்தை இருந்த இடத்தில், பெரும்பகுதி இடத்தை கைப்பற்றி அங்கு புதிதாக பேருந்து நிலை யம் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதனால் வாரச்சந்தை சிறிய இடத்தில் இயங்கி வந்தது. இடம் பற்றாக் குறை காரணமாக, பேருந்து நிலையத்தில் காலியாக இருந்த இடத்தில், வாரச்சந்தை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பழக்கடைகள், சிறு, சிறு வியாபாரிகள், விவசாயிகள் கடை அமைத்து தொழில் நடத்தி வந்தனர். இந்நிலையில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் திட்டத்தின் கீழ், காலி யாக உள்ள இடத்தில் 5 கடைகள் மற்றும் உணவகம் கட்டும் பணிகள் சுமார் 90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இத னால், அந்த இடத்தை நம்பி பிழைப்பு நடத்தி வந்த சிறு வியாபாரிகள் மாற்று இடம் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தைக்கு வந்த வியாபாரிகள், முன்னறிவிப்பின்றி தாங்கள் வியாபாரம் செய்து வந்த இடத்தில், கட்டிடப் பணிகளுக்காக பெரிய, பெரிய குழி தோண்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கிடைத்த இடத்தில் கடை அமைத்து வியா பாரம் செய்தனர். வழக்கமான இடம் இல்லா ததால் வியாபாரமும் நடக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.  மேலும், பேருந்துகள் நுழையும் வழி யில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்ட தால், சந்தைக்கு வரும் பொதுமக்கள் வாக னங்களை நிறுத்த முடியாமலும், பேருந்து கள் உள்ளே நுழைய முடியாமலும் உள்ளது. இடநெருக்கடி காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பெரும்பாலா ன வியாபாரிகள் மெயின்ரோடு சாலையில் திடீர் கடை அமைந்துள்ளதால், போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே, மாற்று இடம் வழங்க வேண்டும். வாரச் சந்தையை விரிவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.