tamilnadu

குளம் தூர்வாரும் பணிக்கு நிதியுதவி வழங்கிய மக்கள் 

 தஞ்சாவூர், ஜூலை 26- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் இருந்தது. இப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தும், இதுகுறித்து கண்டு கொள்ளப்படாமல் இருந்தது.அரசின் புறக்கணிப்பு பொதுமக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.  இந்நிலையில் இப்பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவ சாயிகள் சங்கம்(கைபா) என்ற அமைப்பை தொடங்கி தங்கள் சொந்தப் பணத்தை கொண்டும், பொதுமக்களிடம் நன்கொடையாக நிதியை வசூலித்து அதன் மூலம் பெரிய குளத்தை தூர்வாரி வரும் பணியில் கடந்த 32 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சி பொன்னாங் கண்ணிக்காடு கிராமத்தினர் மற்றும் கொப்பி பொங்கல் விழாக் குழுவினர் சார்பில் கிராமத்தில் நிதி வசூலிக்கப் பட்டது. இதில் வசூலான தொகை ரூ.1 லட்சத்து 51 ஆயி ரத்து 501 வியாழக்கிழமை ஒருங்கிணைந்த கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.