tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளை அலட்சியப்படுத்திய அதிகாரி

கும்பகோணம், அக்.19-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காத்திருப்புப் போராட்டம் செய்தனர்.  மாநில துணைத் தலைவர் டி.கணேசன் மற்றும் மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன் கூறியதா வது:  நாங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை நிறைவேற் றக் கோரி காத்திருப்பு போராட்டம் செய்தோம். அப்போது கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறியதன் பேரில் வந்தோம். ஆனால் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவல கம் முதல் தளத்தில் செயல்படுவதால் மாற்றுத்திற னாளிகள், அதிகாரியை சந்திக்க லிப்ட் வசதி சாய்வு தள பாதையோ எவ்வித வசதியும் இல்லாமல் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் கீழே இருப்ப தாக குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த கோட்டாட்சியரை சந்தித்து பொறுப்பாளர்கள் கோரிக் கையை கொடுக்க கீழே இருக்கிறார்கள் என்று சொன்னோம். ஆனால் அதற்கு மாற்றுத்திறனாளிகளை அலட் சியப்படுத்தும் நோக்கில் அவர்கள் வர வேண்டாம். நீங்கள் பேசுங்கள் என்று சொன்னார். அப்போது நாங்கள் மாற்றுத்திறனாளிகள் கீழே இருக்கும் பட்சத்தில் மாற்றுத் திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று சொன்னோம். அதற்கு அவர்கள் அலட்சியப்படுத்தும் நோக்கில் கீழே இறங்கி வர மனமில்லாமல் அவர்களை போகச் சொல்லுங்கள். உங்களிடம் பேசுகிறேன் என்று சொன்னார்.  அதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனா ளிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து  தரை தளத்தில் இருந்த மாற்றுத்திற னாளிகளை சந்தித்து மனுக்களைப் பெற்று வரும் 22-ஆம் தேதி அனைத்து அலுவலர்களையும் சம் பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.  இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதுபோன்று அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் எங்களைப் புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள் கருதுவதாக தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தினால் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.