தஞ்சாவூர் ஆக.19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது. பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு டிஎன்டிஜே மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.ராணி முன்னிலை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ், மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட மருத்துவர் அணி ஜியா வுதீன், கிளைத்தலைவர் ஹனிபா, செயலாளர் ஆர்.சாகுல் கமீது, பொருளாளர் சேட் இப்றாம்ஷா கலந்து கொண்டனர். முகாமில் 45 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு மருத்து வக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.