tamilnadu

img

தாம்பரம் முதல் செங்கோட்டை.... திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்க திட்டம்

தஞ்சாவூர்:
சென்னை தாம்பரத்திலிருந்து, திருவாரூர் - காரைக்குடி வழியாக செங்கோட் டைக்கு பயணிகள் ரயில் சேவை விரைவில்தொடங்கப்படும் என ரயில்வே வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால், குறித்த நேரத்துக்கு பயணம் செய்ய முடிவதில்லை. அத்துடன்,வேறு கூடுதல் ரயில்களும் இயக்கப்படாததாலும் பயணிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.

எனவே, ரயிலின் பயண நேரம் குறித்தும்,சென்னையிலிருந்து திருவாரூர்- பட்டுக் கோட்டை வழியாக போதுமான ரயில் சேவைகள் இல்லாதது குறித்தும் ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வந்தன. அத்துடன், மக்களவை உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் வாயிலாகவும் வலியுறுத்தப்பட்டு வந்தன.இந்த கோரிக்கைகளை ஏற்ற தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்துக்கு தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர்,பட்டுக்கோட்டை வழியாக செங்கோட் டைக்கு ரயில் இயக்க கருத்துரு அனுப்பியிருந்தது.

இதைத்தொடர்ந்து வாரத்துக்கு மூன்றுநாட்களாக இயக்குவதற்கு அனுமதி தந்துள்ளது. இதன்படி, ஞாயிறு, செவ்வாய்,வியாழக்கிழமைகளில் மாலை 6 மணிக்குபுறப்பட்டு செங்கோட்டைக்கும் மறு மார்க்கத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையிலிருந்து 7.35 மணிக் கும் புறப்படும். அதிவிரைவு ரயிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை,திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக் கோட்டை, காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களில்நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கவும் வாரியம் அனுமதி அளித்துள்ளது. சனி, திங்கள்கிழமைகளில் எர்ணாகுளத்தில் 10.15-க்கு புறப்பட்டு காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கும் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை களில் வேளாங்கண்ணியில் காலை 4 மணிக்குபுறப்பட்டு எர்ணாகுளத்துக்கும் விரைவு ரயிலாக இயக்க உள்ளது எனத் தெரிகிறது.

இதுகுறித்து பேராவூரணி ரயில் பயணிகள் சங்க செயலாளர் ஒருங்கிணைப்பாளர் பாரதி வை.நடராஜன் தெரிவித்ததாவது:

“தாம்பரத்திலிருந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழியாக செங் கோட்டைக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி ஊர்களிலும் இந்த ரயில்களை நிறுத்தம் செய்ய தெற்குரயில்வே முன்வர வேண்டும். அனைத்து ஏ, பி ரயில் நிலையங்களிலும் ஓரிரு நிமிடங்கள் நின்று செல்லும் வகையில் ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா நோய்த்தொற்று முடிந்து திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் உள்ளகேட்டுகளுக்கு பணியாளர்கள் முழுமையாக பணியமர்த்தப்பட்ட பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால்பாதிப்பு இல்லாத பகுதிகளில் ரயில்களை இயக்கலாம்.இந்த செயல்பாட்டுக்கு காரணமான மத்திய அரசு, ரயில்வே வாரியம், தெற்குரயில்வே அதிகாரிகள், திருச்சி கோட்டரயில்வே அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், பொது நல அமைப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

;