districts

img

ICICI வங்கியில் மோசடி - 4 பேர் கைது

காரைக்குடி,அக்டோபர்.20- காரைக்குடி அருகேயுள்ள கல்லலில் இயங்கி வரும் ICICI வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலில் உள்ள ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.2 கோடி மதிப்புள்ள 533 சவரன் தங்க நகைக்குப் பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதான 4 பேரில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதும் மற்ற 3 பேரும் வங்கி ஊழியர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.