tamilnadu

img

திடீரென உள்வாங்கிய கடல் 10 அடி உயரத்திற்கு எழுந்த அலைகள்

தஞ்சாவூர், ஆக.5- தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் ஒரு வாரமாக அதிவேக சூறைக்காற்று வீசி வரும் நிலையில், திங்களன்று கடல் 200 மீட்டர் அளவிற்கு உள் வாங்கியதால், நாட்டுப்படகு மீன வர்கள் ஐந்தாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதி யான அதிராம்பட்டினம், மல்லிப்பட்டி னம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட 37 மீன்பிடி தளங்கள் உள்ளன. இந்த கடற்பகுதிகளில் கடந்த 30 ஆம் தேதி முதல் அதிவேக சூறைக்காற்று வீசி வருவதோடு கடல் சீற்றத்துடனும் அலைகள் 10 அடிக்கு மேல் உய ரத்தில் எழுந்து வருவதாலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அச்சமடைந்து உட னடியாக கரைக்கு திரும்பினர். அத்து டன் 5 நாட்களாக 1,300 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  இந்நிலையில் அதிராம்பட்டினம் காந்திநகர் மீன்பிடி துறைமுக பகுதி யில் கடல் திடீரென உள்வாங்கியதால், கடலுக்கு படகுகளை கொண்டு செல்லும், முகத்துவாரம் சேறுகளால் அடைத்து விட்டதால் படகை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே சேதுபாவாசத்திரம் பகுதியில் கடல் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.