tamilnadu

img

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் புஜபீட ஆசனத்தில் அபார சாதனை

தஞ்சாவூர், ஆக.31- தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரைச் சேர்ந்த ராஜா அண்ணாமலை -  அலமேலு தம்பதியின் 16 வயது மகன் ஆர்.ஹரிஹர அழகப்பன் பட்டுக்கோட்டை லாரல் சிபிஎஸ்இ பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சனிக்கிழமை 116- வது தேசிய விளையாட்டு  தினத்தை முன்னிட்டு கொ ரோனா விழிப்புணர்வுக்காக யோகாவில் உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.  பட்டுக்கோட்டை நாடி யம்மன்கோயில் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிக ழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வா ளர் பெரியசாமி, டாக்டர்கள்  சதாசிவம், பிரதீபா சுரேந்தி ரன் ஆகியோர் முன்னிலை யில் இந்த சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.   இவர் யோகாவில் புஜபீட ஆசனத்தில் 10 நிமிடம் 73 மைக்ரோ செகண்ட் (மில்லி விநாடி) செய்து இந்த சாதனை முயற்சி செய்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பட்டுக்கோட்டை சாய் நிகில் அகாடமியில் யோகா மாஸ்டர் ஸ்ரீநாத் மூலம் யோகா பயிற்சி மே ற்கொண்டு வரும் மாணவர் ஹரிகர அழகப்பன் பல்வேறு  மாவட்ட மற்றும் மாநில அள விலான யோகா போட்டிக ளில் வெற்றி பெற்று பல்வேறு  பதக்கங்களை பெற்றுள்ளார்.  குறிப்பாக காரை க்குடி அழகப்பா பல்கலை க்கழகத்தில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டி யில் மூன்றாமிடம் பெற்று தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போ ட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. யோகாவில் உலக சாதனை முயற்சி செய்த மாணவர் ஹரிஹரஅழகப்பனை லாரல் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் சத்யவதி சந்திரசே கர் வாழ்த்திப் பேசினார். இவர் செய்த சாதனையை பாராட்டி ஆல் இந்தியா யோகா மாஸ்டர்ஸ் அசோசி யேஷன் ‘யோக நட்சத்திரா 2020’ என்ற விருதை வழங்கி  கௌரவித்தனர்.  இதனைத் தொடர்ந்து யோகாவில் சாதனை செய்த  மாணவர் ஹரிஹரஅழ கப்பனை பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளி தா ளாளர் வி.பாலசுப்ரமணியன் பாராட்டி, வாழ்த்து தெரி வித்தார்.