tamilnadu

img

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு திருக்குறள் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.7- தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து பேரா வூரணி திருக்குறள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி அண்ணாசிலை அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருக்குறள் பேரவையின் தலைவர் பாவலர் மு.தங்கவேல னார் தலைமை வகித்தார். புலவர் சு போசு, கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன், பாலசுந்த ரம்(சிபிஐ), வழக்கறிஞர் கருப்பையா(சிபிஎம்),  சின்னப்ப தமிழர்(தமிழ்வழிக் கல்வி இயக்கம்), பாலசுப்பிரமணியன்(மதிமுக), பொறுப்பாளர் கோ.நீலகண்டன்(திமுக), ஆறு. நீலகண்டன் (தமிழக மக்கள் புரட்சி கழகம்), சித. திருவேங்க டம்(திராவிடர் விடுதலைக் கழகம்), சலாம் (மனிதநேய ஜனநாயக கட்சி பொறுப்பாளர்), காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் இப்ராம்சா, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு கட்சி மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில், “திருவள்ளுவர் சிலையை அவம தித்தவர்களை கைது செய்ய வேண்டும். பொது இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மதவாத அடையாளம் பூச தடை செய்ய வேண்டும். தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி உடுத்திய வர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  வலியுறுத்தப்பட்டது.