tamilnadu

img

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்குக! போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

கும்பகோணம், மார்ச் 11-  தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இரண்டாம் நாள் தொடர்  காத்திருப்பு போராட்டம் கும்பகோண த்தில் நடைபெற்றது. கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு  போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு தேதியை உடனே அறிவிக்க வேண்டும். போக்கு வரத்து கழக வரவுக்கும், செலவுக்கும்  இடையிலான பற்றாக்குறைக்கு பட்ஜெ ட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுக் கால  பலன்களை, பஞ்சப்படி நிலுவைத் தொ கையை உடனடியாக வழங்க வேண்டும்.  தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச, லெட்டர் பேடு சங்கங்களை அழைக்கக் கூடாது, 47 சங்கங்களுடன்  பேச்சுவார்த்தை என்று கூறி தொழிலாள ர்களை ஏமாற்றக் கூடாது என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக தலைமையக வாயில் முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் புதனன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. மாநில நிர்வாகி கண்ணன், ஏஐடியூசி துணைத் தலைவர் சந்திரசேகர், பொ துச் செயலாளர் மணிமாறன் மாவட்ட நிர்வாகி குணசேகரன், சிஐடியு பொறு ப்பாளர்கள் திருநாவுக்கரசு, தாமோத ரன், வெங்கடாசலபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.