tamilnadu

img

பள்ளி வகுப்பு தொடக்க விழா 

 தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம்-அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடை பெற்றது.  விழாவிற்கு பள்ளி தாளாளரும், அறக்கட்டளை தலைவ ருமான வழக்கறிஞர் அரிமா வி.ஏ.டி.சாமியப்பன் நிகழ்ச்சி க்கு தலைமை வகித்து பேசினார். விழாவில் அறக்கட் டளை பொருளாளர் பி.பாலசுப்பிரமணியன், அறங்காவ லர் என்.சோமசுந்தரம், பேராவூரணி நகர வர்த்தக கழகப் பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சரோஜா, நிர்வாக அலுவலர் பிலவேந்திர ராஜ், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

;