tamilnadu

உதவித் தொகையுடன் கயிறு தொழில் பயிற்சி  

தஞ்சாவூர்:   தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் கயிறு பயிற்சி அளிக்கப்படுகிறது. கயிறு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிப்பு (டிப்ளமோ கோர்ஸ் இன் காயர் டெக்னாலஜி) பயிற்சி வகுப்பில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு அடிப்படைத் தகுதி மேல்நிலை (ப்ளஸ் டூ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி வரும் பிப்ரவரி 3-ம் தேதி முதல் தொடங்கப்படும். பயிற்சி காலம் 15 மாதங்கள் (உள்பயிற்சி 12 மாதங்கள் மற்றும் இன்டர்ன்ஷிப் பயிற்சி 3 மாதங்கள்) ஆகும். பயிற்சியின் போது மாதம் ரூபாய் 3,000 உதவித்தொகை வழங்கப்படும்.  பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதி உண்டு. பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அலுவலக பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூர் 613403 என்ற முகவரிக்கு ஜன.17 க்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04362-264655 தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;