tamilnadu

அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்க கோரிக்கை

 தஞ்சாவூர், டிச.8- தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பாங்கி ரான்கொல்லை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் எப்போ தும் போல் அங்கன்வாடி குழந்தைகளை படிக்க அனு மதிக்க வேண்டி பொதுமக்கள் சார்பில் ஆர்.ரெத்தினம் கல்வித்துறை அதிகாரிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் அரசுப்பள்ளி 1995 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரு கிறது. பள்ளியின் வளாகத்தில் அங்கன்வாடி மையம் இல்லை. இந்த கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ.தூரத்தில் நெல்லி யடிக்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது.   இந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்களால் 3 கி.மீ தூரம் நடந்து சென்று குழந்தை களை விடுவது மிகவும் சிரமமாக உள்ளது. மக்கள் அனை வருமே கூலித் தொழிலாளர்கள். தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு பொருளாதார வசதியில்லை.  கடந்த 24 ஆண்டுகளாக 3 வயது பூர்த்தி அடைந்த குழந்தை களை தலைமை ஆசிரியர் மூலமாக, கல்வித்துறை அதி காரிகளின் வாய்மொழி அனுமதியுடன் பாங்கிரான்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளோம். தற்போது கல்வித்துறை அதிகாரி எங்கள் பள்ளி யை பார்வையிட்டு, “அங்கன்வாடி குழந்தைகளை பாங்கி ரான்கொல்லை பள்ளியில் வைத்துக் கொள்ள கூடாது” என்று கூறியதன் பேரில் தலைமை ஆசிரியர் பெற்றோர்களி டம் குழந்தைகளை பள்ளியில் விட வேண்டாம் என்று கூறு கிறார்.  குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், பெற்றோர்களால் 3. கி.மீ தூரம் அழைத்து சென்று குழந்தைகளை அங்கன்வாடி யில் விட முடியாத நிலையை கருத்தில் கொண்டும் அங்கன் வாடி குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கு அனுமதி தருமாறும் அல்லது எங்கள் ஊரில் அங்கன்வாடி பள்ளி அமைத்து தந்து குழந்தைகளின் சிரமம் போக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.