tamilnadu

கார், வேன் ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கல்

தஞ்சாவூர், மே 11- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வாடகைக் கார், வேன் ஓட்டுநர்களுக்கு திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், சொந்தச் செலவில் சுமார் 80 பேருக்கு ரூ 60 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பையை வழங்கினார்.  நிகழ்ச்சிக்கு, வாடகைக் கார், வேன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்க கௌரவத் தலைவர் தென்னங்குடி ஆர்.ராஜா தலைமை வகித்தார். சங்கத் தலைவர் சுப.சரவணன் வரவேற்றார். முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ஏ.எஸ்.நீலகண்டன், பொருளாளர் ஆர்.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.