tamilnadu

img

வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வடமாநில பெண்ணுக்கு நீதிக் கேட்டு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன் 7-  வடமாநில பெண்ணை தஞ்சையில் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கவும். மற்ற பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கவும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும் வாலிபர் சங்கம், மாண வர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செய லாளர் அரவிந்த்சாமி தலைமை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க நகர தலைவர் எஸ்.சுமதி, பொரு ளாளர் எம் கமலம், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஜி. ராமர், நகர செயலாளர் ரஞ்சித் தமி ழரசி, மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பிரபாகரன் காயத்திரி விக்னேஷ் அருண் குமார், சிபிஎம் நகரச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதே போல் பாபநாசம் கடை வீதியில் ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பி.விஜ யாள் தலைமை வகித்தார். வாலி பர் சங்க ஒன்றிய செயலாளர் மாத வன், சிபிஎம் ஒன்றிய செயலா ளர் பி.எம்.உசேன் உள்ளிட்ட ஏரா ளமான வாலிபர் சங்க, மாதர் சங்க, சிபிஎம் கட்சியினர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதிக் கேட்டு முழக்கமிட்டனர்.