தஞ்சாவூர், ஜூலை 23- காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளித்தனர். இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர் காவிரி டெல்டாவை பாலைவன மாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி படுகை யை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் உடனடியாக தமிழகத்துக் குரிய தண்ணீரை பெற்றுத் தர தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜனநாயக முறை யில் போராடியவர்கள் மீது போடப்பட் டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன் திட் டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறு களை உடனடியாக மூடவேண்டும் உள் ளிட்டவை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் செவ்வாயன்று தஞ்சாவூரில் பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண் டானா அருகில் மகாராஜா மண்டபத்தில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின்(சிபிஐ) மாநில பொதுச் செயலாளர் வே.துரை மாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க(சிபிஎம்) மாநில துணைத் தலை வர் டி.ரவீந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் சுமார் இரண்டு கிமீ தூரம் நடந்து சென்று ஆட்சியர் அலு வலகத்தை அடைந்தனர். பேரணியில் கலந்து கொண்டோர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன், சி.ஜெயபால், எம்.மாலதி, எஸ்.தமிழ்ச்செல்வி, என். சுரேஷ்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. அரவிந்த்சாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, மாதர் சங்க மாவட்டத் தலை வர் கலைச்செல்வி, தீஒமு மாவட்ட தலைவர் கே.அபிமன்னன் மற்றும் வி.ச., வி.தொ.ச., மாதர் சங்க, மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா. பாலசுந்தரம், மாவட்டத் தலைவர் வீர மோகன், திராவிட முன்னேற்றக் கழகம் ஆம்பலாப்பட்டு நேதாஜி, தாளாண்மை உழவர் இயக்கம் கோ.திருநாவுக்கரசு, தமிழர் தேசிய முன்னணி அயனாவரம் முருகேசன், ஜனநாயக விவசாய தொழி லாளர் சங்க அருணாசலம், சமவெளி விவசாயிகள் இயக்கம் பழனியப்பன், மக்கள் அதிகாரம் காளியப்பன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் அரங்க.குண சேகரன், காங்கிரஸ் பி.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் ராமசாமி, கரும்பு விவ சாயிகள் சங்க ராமநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றிவேந்தன், திரு வோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்க ஒன்றியச் செயலாளர் வி.கே.சின்னத்துரை, சிபிஐ, மதிமுக, விடு தலைச் சிறுத்தைகள், காவிரி உரிமை மீட்பு குழுவினர், பல்வேறு விவசாய சங் கத்தினர், பொதுமக்கள் பங்கேற்றனர். பின்னர் 20-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை நேரில் சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தமிழக அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி யளித்தார்.
மாணவர்கள் ஆதரவு
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆத ரவு தெரிவித்து, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த்சாமி தலைமையில் 4 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்க ணித்து போராட்டம் நடத்தினர். பேரணி யையொட்டி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வ ரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
இதே போல் புதுக்கோட்டை சிறைச் சாலை அருகில் உள்ள ரவுண்டானா வில் இருந்து நடைபெற்ற பேரணியில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன் முன்னாள் எம்எல்ஏ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.டெல்லிபாபு முன்னாள் எம்எல்ஏ.,ஆகியோர் தலைமை வகித்தார். பேரணியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், இந்திய விவசாயிகள் சங்கம் ஜி.எஸ்.தனபதி, நெடுவாசல் போராட்டக்குழுத் தலைவர் கி.தெட்சிணாமூர்த்தி, காங்கிரஸ் விவசாயப் பிரிவு கே.பழனி வேல், இப்ராஹிம்பாபு, விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் எஸ். பொன்னுச்சாமி, தலைவர் ஏ.ராமை யன், எஸ்.சி.சோமையா மற்றும் நிர்வாகி கள் கசி.விடுதலைக்குமரன், க.சுந்தர் ராஜன், கலைச்செல்வன், ராசாங்கம், ஆரோக்கியசாமி, முருகானந்தம், அத் தாணி ராமசாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணி முடிவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகையில் நடைபெற்ற பேரணி யில் அனைத்து விவசாயிகள் சங் கங்கள், அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து மீனவ மக்கள் இயக்கங்கள் சார்பில் 5000 பேர் பங்கேற்றனர். பேரணி, நாகை அவுரித் திடலிலி ருந்து புறப்பட்டு 4 கிமீ தூரம் வரை முழக்கங்களோடு சென்று ஆட்சியர் அலுவலக வளாக வாயிலை அடைந் தது. அங்கு நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் சி.பி.எம். சார்பில் விவசாயி கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாள ரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், தி.மு.க.நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் விவசாயிகள் அணி யின் மாநிலச் செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயன், சி.பி.ஐ.சார்பில் மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.சம்பந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் அரா.பேரறிவா ளன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் காளியம்மாள், காவிரிப் பாசனப் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வலிவலம் கும ரேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பின்னர் அனைத்து இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் 50 பேர் கொண்ட தலைவர்கள், ஆட்சியரைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகம் சென்றனர். ஆனால் ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என்ற தகவல் வர இயக்கத் தலைவர்கள் ஆட்சியர் அலுவலக வாயி லிலேயே அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். அதன்பின் மாவட்ட வரு வாய் அலுவலர் இந்துமதி மனுவைத் தான் பெற்றுக் கொள்வதாகக் கேட்டுக் கொண்டதற்குப் போராட்டத் தலை வர்கள், ஆட்சியரை வரச் சொல்லுங்கள் அவரிடம் தான் மனுவளிப்போம்” எனக் கூறினர். ஆட்சியர், மயிலாடுதுறை சென்று விட்டதால், மாலை தான் வருவார் எனக் கூறி, மாவட்ட வருவாய் அலுவலர் சமா தானம் செய்ததால், பின் தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு வைக் கொடுத்து விட்டு, இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால், போராட்டம் ஓயாது என கூறினர்.