தஞ்சாவூர், செப்.5- தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 6-ஆம் தேதி மற்றும் 13, 20, 27-ஆம் தேதிகளில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டம் படித்தவர்களும், வயது வரம்பு 18 முதல் 35-க்குள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் உள்ள வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டல் மையத்தில் நேரில் ஆஜராகி பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதே போல் 6-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.