tamilnadu

அதிராம்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா மூடைகள் பறிமுதல்

தஞ்சாவூர், மார்ச் 1- அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியிலி ருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சா, 40 லிட்டர் பெட்ரோல், 5 லிட்டர் ஆயில் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்த னர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதி களில் கடந்த சில நாட்களாக கஞ்சா போதை பொருள்கள் கல்லூரி மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. மேலும், ஆந்திராவிலிருந்து தமிழக கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) செங் கமலக்கண்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் தனிப் படையினர் கஞ்சா விற்பனை குறித்து விசா ரணை நடத்தினர். இதில் பட்டுக்கோட்டை என்ஜிஓ காலனியில் ஒரு வீட்டிலிருந்து சனிக் கிழமை கஞ்சா மூட்டைகளை எடுத்துக் கொண்டு அதிராம்பட்டினம் அருகே மற வக்காடு பகுதிக்கு சிலர் சென்றதாக தக வல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போது அலையாத்திக்காடு பகுதியில் பதுக்கி வைத்திருந்த 220 கிலோ கஞ்சா மூடை களையும், 40 லிட்டர் பெட்ரோல், 5 லிட்டர் ஆயில் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மறவக்காட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன், முருகேசன், குமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் தலை மறைவாக உள்ள அய்யம்பெருமாள் என்ப வரை தேடி வருகின்றனர். இந்த கஞ்சா மூடை களை படகில் இலங்கைக்கு கடத்த இருந்த தாக விசாரணையில் தெரிந்தது.