tamilnadu

img

பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை: அதிகாரிகள் ஆய்வு செய்யக் கோரிக்கை

தஞ்சாவூர், அக்.26- தஞ்சையில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில் கமார், மாவட்டச் செயலாளர் என். வி.கண்ணன் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேலி டம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,  “2008  ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளில், 2,494 விவசாயிகளுக்கு எத்தகைய காரணங்களால் காப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட விவசாயி களுக்கு தெரிவிக்க வேண்டும்.  ஒவ்வொரு தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கியிலும் 50 முதல் 100 க்கும் மேற்பட்டவர்களு க்கு ஒதுக்கீடு வங்கிகளுக்கு வர வில்லை. எனவே பாக்கி உள்ள விவ சாயிகளுக்கு உடன் காப்பீடு கிடைக்க ஆவண செய்திட வேண்டும். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட அம்மாபேட்டை, பாபநாசம், கும்ப கோணம், திருவிடைமருதூர், திருப் பனந்தாள் வட்டாரங்களில் வரு வாய் கிராம அளவில் இழப்பீடு சதவீதம் மாவட்ட இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை.  மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இழப்பீடு சதவீதத்தை உடன் வெளி யிட வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் உள்ள முறைகேடுகளை தடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் கடன் பெற கூட்டுறவு வங்கியில் புதிதாக கணக்கு துவங்க வேண்டும் என்பதோடு பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கேட்பதை தவிர்த்திட வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போதுமான அளவு உரம் கையி ருப்பு வைத்திருக்க வேண்டும்.  தற்போது ஏற்பட்டுள்ள யூரியா பற்றாக்குறையை போக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சா வூர் மாவட்டத்தில் போதுமான அளவு மழைப்பொழிவு இல்லாத பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். குறிப்பாக வெட்டாறு நெடார் தலைப்பில் இருந்து பிரியும் மெலட் டூர் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். பொதுப்பணித் துறை யின் உயரதிகாரிகள் மழைக்கா லம் துவங்க உள்ளதால் முன்னெச்ச ரிக்கையாக ஆறு மற்றும் ஏ பிரிவு கால்வாய் கரைகள் அனைத்தை யும், விவசாயிகளுக்கு தெரிவித்து ஆய்வு செய்திட வேண்டும். அதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.  உரத்தின் உத்தேச விலையை விவசாயிகள் அறிந்து உள்ள நிலையில், பூச்சிக்கொல்லி விலை குறித்து விவசாயிகள் பெருமளவில் அறிந்திருக்கவில்லை. எனவே பூச்சிக்கொல்லியின் உயிரியல் பெயர் எழுதி, ஒவ்வொரு விற்பனை நிலையத்தின் முன்பும் பலகை வைத்திட வேண்டும். சரியான விலைக்கு விற்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்திட வேண்டும்.  விலை விபரங்களையும் பூச்சிக்கொல்லி தாக்குதல் குறித்து விவசாயிகள் அறிய தொழில்நுட்பம் அறிந்த அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு தொடர்பு எண்ணை விவசாயிகளுக்கு தெரிவித்திட வேண்டும். திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வா கம், வங்கியில் விவசாயிகள் பெய ரில் கடன் பெற்றதை, மாற்றி ஆலை நிர்வாகத்தை கடன்தாரராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் கூறப் பட்டுள்ளது.