tamilnadu

கொரோனா பாதித்தவரை ஏற்றி வந்த இருவர் மீது வழக்கு

பேராவூரணி, மே 11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், செருவாவிடுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில், பள்ளி மாண வர்களின் சுகாதார மேம் பாட்டை பேண, நடமாடும் மரு த்துவக்குழு உள்ளது. இதில் உள்ள மருத்துவ பணியா ளர்களை பேராவூரணி ஒன்றி யப் பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒரு தனியார் வாகனம் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வந்தது. ஊரடங்கு நேரத்தில் சுகா தார நிலைய விதிமுறைகளை மீறி அனுமதியின்றி சென்னையில் இருந்து களத்தூர் பகுதியை சேர்ந்த சிலரை அந்த வாகனம் மூலம், அழைத்து வந்துள்ளனர். அதில் ஒருவருக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அதனைத் தொ டர்ந்து நடத்திய அதிகாரி களின் விசாரணையில் சம் பந்தப்பட்ட  ஒப்பந்த வாக னம், வட்டார மருத்துவ அலு வலர் மற்றும் தொடர்புடைய டாக்டரின் அனுமதி இன்றி சென்னை சென்று வந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரில் வாகனத்தின் உரி மையாளர் திருச்சிற்றம் பலத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் மற்றும் ஓட்டுநர் சின்னத்துரை ஆகியோர் மீது திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.