தஞ்சாவூர் டிச.24- தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் கழக நிர்வாகிகள் சேகர், சின்னக்கண்ணு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டாக்டர் செல்லப்பன், சி.பக்கிரிசாமி, ஏ.எம்.மார்க்ஸ், ரோஜா ராஜசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மோரீஸ் அண்ணாதுரை, வாலிபர் சங்கம் மோரீஸ் அண்ணாதுரை, தமுஎகச நிர்வாகிகள் தி.தனபால், கிறிஸ்துதாஸ், பசுபதி, குலோத்துங்கன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சக்கரவர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.