tamilnadu

img

ஓய்வூதியர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளிக்கு குடிநீர் வசதி

தஞ்சாவூர் அக்.6- கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதியில், துயர் துடைப்பு பணியாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கம் சார்பில், ஆழ்து ளைக் கிணறு, மோட்டார் புது ப்பித்து, குடிநீர் வழங்கும் பணிக்கு ஒப்படைத்தல் விழா நடைபெற்றது.  கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால், தஞ்சை மாவ ட்டம், பேராவூரணியை அடுத்த மணக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கி வந்த ஆழ்துளைக் கிணறு சேதமடைந்தது. இத னைப் புதுப்பித்து, புதிய  மோட்டார் மற்றும் கட்டுமா னப் பணிகள் சுமார் ரூ 1 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் அமைத்து தந்துள்ளது. இதற்கான விழா ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டத்தலைவர் இர.கலியமூர்த்தி தலை மையில் நடைபெற்றது. வட்ட த்தலைவர் கணே.மாரி முத்து வரவேற்றார்.  மாநில பொதுச்செ யலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆர். ராஜகோபாலன் விளக்கவு ரையாற்றினார். குடிநீர் திட்டங்களை ஒப்படைத்து, மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசி யதாவது, “தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கம் ஆந்திரா, ஒரிசா,  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு  மாநிலங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, நிதி வசூலித்து அம்மாநில முதலமைச்சர்களிடம் வழ ங்கினோம். கடலூரில் இய ற்கை பேரிடர் ஏற்பட்டபோ தும் பல்வேறு வகைகளில் உதவிப் பணிகளைச் செ ய்துள்ளது. பள்ளிக் கல்வியை பாது காக்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது. நாகை மாவட்டம் கரியாப்பட்டி னம் உள்ளிட்ட 6 அரசுப்பள்ளி களில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அத னொரு பகுதியாக இன்று  மணக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் குடி நீர் வசதி வழங்கப்பட்டு ள்ளது” என்றார். பட்டுக்கோ ட்டை மாவட்டக் கல்வி அலு வலர் ஆர்.ஜெயபால் நன்றி தெரிவித்துப் பேசினார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்.சி.பழனிவேலு, சமூக ஆர்வலர்கள், சேதுபா வாசத்திரம் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள், அரசு ஊழியர், ஓய்வூதியர் சங்க நிர்வாகி கள், மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மகா லிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.நீல கண்டன் நன்றி கூறினார்.