தஞ்சாவூர், அக்.6- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு முன்னணி ஊழியர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் நீண்ட நாட்க ளாக பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலா ளர்களை அடையாளம் கண்டு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வரும் அக்டோபர் 10 அன்று திருச்சி தென்னூரில் உள்ள மின் பகிர்மான தலைமை பொறியாளர் அலுவல கம் முன்பு மண்டல அளவிலான மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒரத்தநாட்டில் முன்னணி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்ட தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் து.கோ விந்தராஜ், வட்டத் தலைவர் ஏ. அதிதூத மைக்கேல்ராஜ், வட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ், மாவட்ட பொருளாளர் எம். ஆரோக்கியசாமி மற்றும் ஒப்பந்த தொழி லாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.