கும்பகோணம், ஜூலை 30- தேசிய அளவிலான இருபதாவது உறைவாள் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை காஷ்மீர் மாநிலம் சிம்லாவில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் மூன்று மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தேசிய அளவிலான போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கக் கூடிய மாணவர்களை தேர்வு செய்யும் பணி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த 175 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். 11,16, 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தேர்வு போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் நடுவர்களாக தூத்துக்குடி மாவட்ட உறை வாள் போட்டியின் சங்கத் தலைவர் கௌதமன் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஜெ.செந்தில்குமார் ஆகியோர் செயல் பட்டனர். தேர்வுப் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பள்ளி தாளாளர் கார்த்திகேயன் வழங்கினார். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 50 மாண வர்களும், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய அள விலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.