தஞ்சாவூர், ஆக.3- வங்கி வாடிக்கையாளர்க ளின் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் வாடி க்கையாளர்கள் சிலருக்கு, பணம் எடுக்காமலேயே பணப் பரிவர்த்தனை செய்ய ப்பட்டதாக, எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. வாடிக்கையா ளர் கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் அடு த்தடுத்து 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை நகரில் மட்டும், 100-க்கும் மேற்பட்டோர் கணக்கில் இருந்து, பணம் எடுக்கப்பட்டுள்ளது. வங்கி க்கு சென்று கேட்ட போது, ‘எங்களுக்கு தெரியாது’ என அதிகாரிகள் அலட்சிய மாக பதில் அளித்துள்ளனர். அதனால், பாதிக்கப்பட்ட வர்கள் எஸ்.பி., அலுவல கத்தில் புகார் அளித்துள்ள னர். அதிராம்பட்டினத்தில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி வாடி க்கையாளர்களின் கணக்கில் இருந்து மட்டும் 3 கோடி ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையா ளர்களின் கணக்குகளை, ‘ஹேக்’ செய்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வழக்கு களை, சென்னையில் உள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி விட்டதாக, தஞ்சா வூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். சினிமா பாணியில் அர ங்கேறும் இந்த மோசடியால், தஞ்சை மாவட்ட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பாலசுந்தரம் கூறுகையில், என் வங்கிக் கணக்கில், 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துள்ளனர். ஆய்வு செய்ததில், திருச்சியில் இரு ந்து பணம் எடுக்கப்பட்டது, தெரிந்தது. அதனால் ஏ.டி.எம்., கார்டு செயல்பாடுகளை முடக்கி விட்டேன். நடவ டிக்கை இல்லை. அதன் பிற கும் பணம் எடுக்க முயற்சி த்துள்ளனர்.
அதற்கான எஸ். எம்.எஸ்., எனக்கு வந்தது. இது தொடர்பாக, வங்கியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுபோன்று பல ரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகு திகளில் இருந்தும், பணம் எடு க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. என்றார். அதிராம்பட்டினம் இந்தி யன் வங்கி ஊழியர்கள் கூறு கையில், ‘அடுத்தடுத்து புகா ர்கள் வந்ததால், தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளோம். வங்கி தலைமை அலுவல கத்திற்கும் புகார் அளித்து ள்ளோம்’ என்றனர்.