தஞ்சாவூர், ஜூலை 5 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற அனைத்து மத பிரதி நிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், “மத வழிபாட்டு தலங்களுக்கு 10 வயதுக்கு ட்பட்டவர்களும், 65 வய துக்கு மேற்ப்பட்டவர்களும் செல்லக்கூடாது” எனத் தெரி விக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்துள்ள தள ர்வின் அடிப்படையில் கிராம பகுதிகளில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனு மதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை கூட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சி யர் ஜெயலட்சுமி தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டா ட்சியர் ஜெயலட்சுமி பேசுகை யில், “144 தடை உத்த ரவு தற்பொழுதும் நடைமு றையில் உள்ளது. கிராமப் பகு திகளில் வழிபாட்டு தல ங்களை திறக்கலாம். ஆனால் நிபந்தனைகளை கட்டா யம் பின்பற்ற வேண்டும். வழி பாட்டு தலங்களுக்கு கண்டி ப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் வரக்கூடாது. தண்ணீர், சோப்பு, சானி டைசர் அவசியம் முகப்பு பகுதியில் வைக்க வே ண்டும், முகக் கவசம் கட்டா யம் அணிய வேண்டும், பிரசா தங்கள் பார்சலாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். வழி பாட்டுத் தலங்களில் சமூக இடைவெளிவிட்டு வழிபட வேண்டும். கோவிலில் நடைபெறும் திருமண விழா வில் 20 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், ஒரே நேரத்தில் பல திரும ணங்களை நடத்தாமல், ஒவ்வொரு திருமணமாக நடத்த கோவில் நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.