tamilnadu

தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி முக்கிய செய்திகள்

தென்னை விவசாயிகளுக்கு கஜா புயல் நிவாரணம் உடனே வழங்க கோரிக்கை 
தஞ்சாவூர், செப்.8- கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இதுவரை இழப்பீடு கிடைக் காத தென்னை விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய சிறப்பு பேரவை தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பேரவைக்கு மாவட்ட துணைத் தலை வர் ஏ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவராக ஆர்.எஸ்.வீரப்பன், செயலாளராக ஆர்.ஜீவானந்தம், பொருளாளராக மாதவன், துணைத் தலைவர்களாக நாதன் சாமுவேல், லெட்சத்தோப்பு ரமேஷ், துணைச் செயலாளர்களாக கே. பாலசுப்பிரமணியன், எஸ்.பழனிவேலு மற்றும் கே.ஆர்.ஞான சேகரன், எம். சாமிநாதன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஒன்றி யக் குழு அமைக்கப்பட்டது.  கூட்டத்தில், “கஜா புயலில் வாழ்வாதாரமான தென்னை யை இழந்து இதுவரை நிவாரணம் கிடைக்காத விவசாயி களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க மாவட்ட ஆட்சி யர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக் கப்பட்ட ஓட்டு வீடு, குடிசை வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.  மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி, தண்ணீர் திறக்கப்பட்டு 25 நாட்களை கடந்த நிலையில் இதுவரை கடை மடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே கடை மடைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி தண் ணீரை நிரப்பித் தர வேண்டும்.  அதம்பை, லெட்சத்தோப்பு, தம்பிக்கோட்டை வடகாடு ஆகிய சிஎம்பி பாசன வாய்க்கால்களை சீர்செய்து, தடை யின்றி தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், பழைய விவசாயக் கடன்களை ரத்து செய்து விட்டு, புதிதாக கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கொன்னையூர் கோவில் விழா
பொன்னமராவதி, செப்.8- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வைரமுத்து, காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், திருமயம் நீதிபதி இந்திராகாந்தி, உதவி ஆணை யர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர்கள் வைரவன், முத்துராமன், பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு தலைவர் முத்துக்கருப்பன், செயலாளர் ராம.ராஜா அம்பலகாரர், பொருளாளர் ராகசெல்வம், நிர்வாகிகள் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, உறுப்பினர் மாரிமுத்து, ஒன்றிய இணைச் செயலாளர் மோகனா சேகர், அன்னதான கமிட்டி தலைவர் சிங்காரம், முன்னாள் அறங்காவலர் குழுத்தலை வர் ஜெயராமன் மற்றும் நாட்டார்கள், நகரத்தார்கள், மண்ட கப்படிதாரர்கள், தலைமை பூஜகர்கள் உள்ளிட்டோர் செய்த னர். சுற்று வட்டார பகுதி ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு
நாகர்கோவில், செப்.8- தக்கலை அருகே ஆற்றில் மாயமான வாலிபர் உடல் ஞாயிறன்று மீட்கப்பட்டது.  தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் - சகிலா தம்பதியரின் மகன் சஜித் (23) . இவர் சென்னை யில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். தனது தாய் சகிலாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட தையடுத்து சஜித் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அவர் வெள்ளியன்று சரல்விளை பகுதியில் உள்ள வள்ளி யாற்றில் குளிக்கச் சென்றார் . அப்போது சஜித் தண்ணீரில் மூழ்கினார்.  இதுகுறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்காததால் சனியன்று இரண்டாவது நாளாக அவரை தேடும் பணி நடைபெற்றது.  இந்நிலையில் ஞாயிறன்று காலை தக்கலை அருகே மிளகு பேட்டை பகுதியில் வள்ளியாற்றில் சிலர் குளிக்க சென்ற போது, ஆற்றின் கரையருகே புதரில் ஒரு ஆண் பிணம் கிடந்ததை கண்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி திவ்யா மற்றும் தக்கலை காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அது நீரில் மூழ்கி மாயமான சஜித் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மேலும் அவர்கள் சஜித்தின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்ப வம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

துணை ஆட்சியர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு 
திருநெல்வேலி, செப்.8-  நெல்லை தச்சநல்லூர் துர்க்கை அம்மன் கோவில் தெரு வை சேர்ந்தவர் பரமசிவம். ஓய்வு பெற்ற துணை ஆட்சியர். இவரது மனைவி கோமதி (65). இவர்களுக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமண மாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கோமதிக்கு உடல் நிலை சரியில்லாமல் உள்ளதாம். இதையடுத்து சனிக்கிழமை அவர் மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். பரமசிவமும் அதே அறையில் தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் முன்பக்க கதவை சிறந்த மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்கு வந்துள்ளார் அவர்கள் தூங்கி கொண்டு இருந்த அறையின் கதவு திறந்து கிடைக்கவே உள்ளே நுழைந்த அந்த ஆசாமி கோமதி கழுத்தில் கிடந்த சுமார் 10 பவுன் சங்கிலியை பறித்து உள்ளான் ஏற்கனவே மாத்திரை சாப்பிட்டு தூங்கியதால் கோமதிக்கு உடனடியாக எழுந்தி ருக்க முடியவில்லை என தெரிகிறது. இதையடுத்து அவர் தனது கணவரிடம் யாரோ மர்ம ஆசாமி ஒருவர் வந்துவிட்டு செல்வதுபோல் தெரிகிறது என்று கூறியுள்ளார் அவர் எழுந்து பார்ப்பதற்கு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் இதன் பின்னர் அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் சங்கிலி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.